Kavithai 2017-03-25T16:44:52+00:00

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை
**

வண்ணங்களின் கலவையை
களவாடினேன் இறையிடமிருந்து
பட்டாம்பூச்சி
**

வீட்டுக்குள்ளே
வீட்டைக்கட்டியது
எறும்புகள்
**

சேமிப்பை கற்றுக்கொண்டேன்
ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்
எறும்புகளிடமிருந்து.
**

பூமியில்
பிணைந்த வாழ்க்கை
மண் புழுக்கள்
**

நிர்வாண குளியலை
ஒழிந்து பார்த்து ரசித்தது
சுவற்று பல்லி
**

கண்ணீரால்தான்
கடல் கசந்ததோ
மீன்கள்
**

கனவில்லை காரணம் தூக்கமில்லை
ஓசை காதை பிளந்தது
கொசுக்கடி
**

ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்
**

By | July 11th, 2006|Categories: கவிதை|7 Comments

தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)

uyirin uyirae…uyirin uyirae
nadhiyin madiyil kaathu kidaikindrean
eera alaigaL neerai vaari mughathil iraithum
muzhudhum vaerkindrean

கண்ணின் மணியே கண்ணின் மணியே
உலகில் உதிக்க பார்த்து இருந்தேனே
கருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்
உணர்வில் ரசித்தேனே

nagarum neruppai kozhundhu vetterindean…
aNaindha pinbhum…analin maelirundean
kaalaipaniyaaga yeNNai vaarikondaay
naeram kooda yedhiri aagivida…yughaNgaL aaga vaedam maarivida…
aNaththu kondaayae…pinbhu yaenoa sendraay

அசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்
பார்த்தும் பூத்தும் … காத்துக் கொண்டிருந்தேன்
சிப்பி முத்தாக எனக்குத் தாய்மை தந்தாய்
பத்து மாதம் சுலபமாகிவிட..
பகலும் இரவும் ஒன்றாய் மாறி விட
உயிராய் உதித்தாயே.. தாய்ப்பால் ஏனோ மறுத்தாய்

swasamindri thavikiraenae
unadhu moochchil pizhaikkiraenae
idhazhLgaLai idhazhLgaLaal nirappida vaa peNNae
ninaivu yengoa neendhi chella
kanavu vandhu kaNNai kiLLa
nizhal yedhu nijamayedhu kuzhambinean vaa peNNae
kaatril yendhan kaigaL rendum
uNNai andri yaarai thaedum
vilagi poagaadhae tholaindhu poavaenae
naan…naan…naaan

சுவாசமாக நானிருந்தேன்
கவசமாகக் காத்திருப்பேன்
அன்னையை மன்னித்து அருந்திட வா கண்ணே
நிலை தடுமாறி நடந்து செல்ல
கண்ணீர் வந்து கண்கள் நிரம்ப
துயரங்கள் துடைத்திட துடிக்கிறேன் குடித்திடு கண்ணே
உலகில் உந்தன் பிறப்பென் உச்சம்
உன்னால்தானே என் வாழ்வில் வெளிச்சம்
வெறுத்து ஒதுக்காதே இறந்து போவேனே
நான் நான் நான்…

By | July 9th, 2006|Categories: கவிதை|3 Comments

பெண்ணே…

கொலை செய்தால் ஊரறிய
வலி அவளுக்குள்
கருசிதைவு
**

பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை
**

நாளைய கல்பனாசாவ்லாவை
இரையாக்கினால் கள்ளிப்பாலுக்கு
பெண் சிசுக் கொலை
**

சாதி தீயினால்
துணிந்து எரிந்தால்
‘சத்தி’
**

தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி
**

By | July 4th, 2006|Categories: கவிதை|12 Comments

துளிப்பா

எச்சிலை சேர்த்து
தாகத்தை துளைத்தார்
தண்ணீர் பஞ்சம்
**

உயிர்
மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
பட்டு பூச்சி
**

முகத்தில்
அழகிய வளைவு
சிரிப்பு.
**

மனம் அறிந்து கூறினேன்
மனம் அழுதது
காயப்படுத்திய பொய்
**

மாலை காற்றில்
கலைந்தது வண்ணம்
காலை பொழுது.
**

By | July 4th, 2006|Categories: கவிதை|6 Comments

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமா
வான் உலகை மறக்குமா
உலகம் பூமியை மறக்குமா
பூமி நிலத்தை மறக்குமா
நிலம் பாதையை மறக்குமா
பாதை கால்சுவடை மறக்குமா
கால்சுவடு உரிய கால்களை மறக்குமா
கால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமா
கண்கள் காக்கும் இமையை மறக்குமா
இமை உடலை மறக்குமா
உடல் உயிரை மறக்குமா
உயிர் எதுவும் மறக்குமா
எதுவும் எதையும் மறக்காத போது
என்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

By | July 3rd, 2006|Categories: கவிதை|2 Comments

அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடி
கண்களில் மழை வந்தது
தேங்கி நின்றது பிரிவு.
**

இரு கைகளுக்கு நடுவே
நகர்கிறது நாட்கள்
குயவன்.
**

சூரியனுக்கு கீழ்
எல்லாம் வெளிச்சம்
கடற்கரை குளியல்
**

மயங்க வைத்ததும் அதுதான்
காயப்படுத்தியதும் அதுதான்
சுழறும் நாக்கு.
**

By | July 2nd, 2006|Categories: கவிதை|3 Comments