போலி வார்த்தைகள்
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ வீசும் பார்வையின் ஒளி
என்னை வந்து கிள்ளுது.
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ விடும் மூச்சு காத்து
உன் ஏக்கம் சொல்லி கொல்லுது
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகி
மேகமழையோடு என்னை தொட்டு செல்லுது
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்
என்னை அணைத்து என்னமோ பண்ணுது
மனதால் உணர்த்தும் காதல் போதும்
வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!
எப்போது நுழைந்தாய் என்னுள்?
கல் தோன்றி மண் தோன்றா
காலத்தில் தோன்றியிருப்பினும்
வயதில்லாமல் திரிவதால்
வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?
மனதிற்கு அருகில் இருக்கும்
கருவறையில் கற்க தொடங்கியதால்
உள்ளத்தை மட்டுமே
விரும்பச் செய்தாயோ?
கண்டவுடன் வராததால்
நட்பாக விதைத்தாயோ?
வேற்று கருத்து வாக்குவாதத்தின்
வெற்றியில் வேருட்டாயோ?
மின்னஞ்சல்களை கண்டு
மின்னலடித்ததில் முளைத்தாயோ?
என்னைவிட அதிகம்
என்னை அறிந்திருந்ததில்
அடைப்பட்டேனோ?
என்னை எனக்கே
உணர்த்தி உயர்த்த நினைத்ததில்
உறைந்தேனோ?
தொலைவில் நீ சென்றால்
தவிப்பில் நான் தொலைந்தேன்!
அழையா விருந்தாளியாக
வந்துவிட்டதால்
மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.
தோற்றது நானென்றாலும்
ஜெயித்தது காதல்தானே!
வாடகை வீடு – வில்லா 72
வீடு தேடினோம்
பாலைவனத்தில்
விரைந்து நடந்தோம்
பாதசாலையில்
வின்னை முட்டும்
கட்டிடங்கள் இடையில்
வீதி வீதியாய்
வரிசை வீடுகள்
விசால வராண்டா
வேண்டாம்டா எனக்கு
நிம்மதி குடியிருக்கும்
வீட்டை காட்டுடா
வில்லை வில்லையாய்
குட்டி வீடுகள்
கொட்டி கொடுத்தாலும்
கிடைக்காத இல்லங்கள்
வெளிச்சம் நிறைந்த
திறந்த வெளி
வில்லாவானாலும் பாலையிலே
பூத்த சோலை
வயல்காடு போல்
புற்கள் அளவாய்
வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய்
வளர்ந்து நிற்க
வெட்கத்தில் வெக்கிய
மல்லி கொடி கவிழ்ந்து படற
விக்கி விக்கி என்று பூனை பெயரை
விளிக்கும் கிளி
விடிந்ததும் சூரியனை கண்டு
கூவ சேவல்
விட்டு விடாமல் பட்டென்று
குடியேறினோம் வீட்டின் உள்ளே.
விச்சித்திர பிறவி
விரும்பாத வேதனை வந்தால்
விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.
வலியால் துடிக்கும் போது
வழிவகுக்கும் துணையை தேடி.
வினோதமானவனே, உனக்கோ…
வந்தது வந்தது வேதனை வந்தது
வேதனையோடு கூடிய வலியும் வந்தது
வலியிலும் ஞானம் வந்தது
வெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்தது
விதிவிளக்கு போல் ஒளி தெரிந்தது
வெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியது
வெற்று மனலையும் விரும்ப செய்தது
வெறித்த கண்ணால் செதுக்க முடிந்தது
வற்றாத ஊற்றாக கற்பனை பிறந்தது
வர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.
தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்கு
தன்னை மறந்து கவிதை பிறந்தது.
காதல் கடிதம்
பெயரில்லாததால்
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.
பாதுகாப்பு!
துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது
எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!
www.thisaigal.com/jan06/jazeelakavi.htm