உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை
**

வண்ணங்களின் கலவையை
களவாடினேன் இறையிடமிருந்து
பட்டாம்பூச்சி
**

வீட்டுக்குள்ளே
வீட்டைக்கட்டியது
எறும்புகள்
**

சேமிப்பை கற்றுக்கொண்டேன்
ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்
எறும்புகளிடமிருந்து.
**

பூமியில்
பிணைந்த வாழ்க்கை
மண் புழுக்கள்
**

நிர்வாண குளியலை
ஒழிந்து பார்த்து ரசித்தது
சுவற்று பல்லி
**

கண்ணீரால்தான்
கடல் கசந்ததோ
மீன்கள்
**

கனவில்லை காரணம் தூக்கமில்லை
ஓசை காதை பிளந்தது
கொசுக்கடி
**

ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்
**

By | 2006-07-11T06:38:00+00:00 July 11th, 2006|கவிதை|7 Comments

7 Comments

  1. சேரல் July 11, 2006 at 8:16 am - Reply

    /*குடத்தை கீழே வைக்காமல்
    நகர்ந்தது தண்ணீரை தேடி
    நத்தை*/

    /*நிர்வாண குளியலை
    ஒழிந்து பார்த்து ரசித்தது
    சுவற்று பல்லி*/

    /*ரங்கோலி
    ஏமாற்றம்
    பசியுடன் எறும்புகள்*/
    இந்தக் கவிதைகளை நான் மிகவும் ரசிக்கிறேன்!
    தரமான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

  2. நாகை சிவா July 11, 2006 at 8:19 am - Reply

    //குடத்தை கீழே வைக்காமல்
    நகர்ந்தது தண்ணீரை தேடி
    நத்தை//
    //ரங்கோலி
    ஏமாற்றம்
    பசியுடன் எறும்புகள்//

    இது இரண்டு நல்லா இருக்குங்க.

    “ஏமாற்றத்துடன்
    எறும்புகள்
    வாசலில்
    ரங்கோலி!”

  3. தம்பி July 12, 2006 at 5:13 am - Reply

    வழக்கம்போலவே எல்லாம் நல்லா இருக்கு

    “ரங்கோலி
    ஏமாற்றம்
    பசியுடன் எறும்புகள்”

    இது என்னை கவர்ந்தது

    அன்புடன்
    தம்பி

    பின்குறிப்பு: ஆறு போட்டாச்சு!!

  4. ஜெஸிலா July 12, 2006 at 6:06 am - Reply

    நாகை சிவா, சேரல் மற்றும் உமா கதிர் -பாராடுக்கு நன்றி.

  5. ///
    ரங்கோலி
    ஏமாற்றம்
    பசியுடன் எறும்புகள்
    ///

    கோலப் பொடியை அரிசி மாவுக்கு பதிலாக உபயோகிப்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்( அதைப் பத்திதானே சொல்லிருக்கீங்க இல்லை நான் தப்பா புரிஞ்சுகிட்டேனா? )

  6. மா.கலை அரசன் July 13, 2006 at 5:13 am - Reply

    நல்ல தரமான வார்த்தை பிரயோகங்கள்.
    //குடத்தை கீழே வைக்காமல்
    நகர்ந்தது தண்ணீரை தேடி
    நத்தை//
    மிகவும் ரசிக்கும் படி இருக்கின்றது.

  7. ஜெஸிலா July 13, 2006 at 7:13 am - Reply

    குமரன் சரியாக புரிந்த பிறகு சந்தேகமென்ன?

    நன்றி கலை அரசன்.

Leave A Comment