About Jazeela Banu

This author has not yet filled in any details.
So far Jazeela Banu has created 164 blog entries.

மரணப் போட்டி

அடக்கம் செய்தனர் எனைஆடம்பரமில்லை, கூட்டமில்லைகண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லைநான் நிழலாக சுவற்றில் மட்டும்நிசப்தத்திலும் நித்திரையில்லைஇறந்த பின்பும் நிம்மதியில்லைசெத்தும் சாகடித்திருந்தேன்குழந்தையை, அவள் தகப்பனுடன்குடித்து வண்டி செலுத்தினேன்இடித்து மரணித்தோம்யார் முந்தி, அதிலும் போட்டிஎன்னால் இரண்டு விதவைகள்நேற்று இருந்த நண்பர்கள்இன்று இருக்கவில்லைசந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்சடங்கில் எங்கோ தொலைந்தனர்நிறுவனம் நிரப்பியிருந்ததுஎன் இடத்தைகுடும்பத்தில் ஈடுகட்டமுடியுமாஎன் இடத்தை?இறந்த இதயமும்வெட்கத்தில் அழுதது‘அப்பா’ என்று அழுபவனைஅணைத்துக் கொள்ள துடித்ததுஇறப்பில் தெளிந்ததுஎன் போதை மட்டுமல்லஎன் பேதமையும்தான்கடந்த பின் விடிந்து பயன்?மணமற்ற மலர் படத்திற்குமீண்டும் பிறக்க பிடிக்கவில்லைவாழ பிடிக்காமலல்லமீண்டும் மரிக்க பிடிக்காமல்.

By | 2006-07-12T05:52:00+00:00 July 12th, 2006|கவிதை|9 Comments

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்நகர்ந்தது தண்ணீரை தேடிநத்தை**வண்ணங்களின் கலவையைகளவாடினேன் இறையிடமிருந்துபட்டாம்பூச்சி**வீட்டுக்குள்ளேவீட்டைக்கட்டியதுஎறும்புகள்**சேமிப்பை கற்றுக்கொண்டேன்ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்எறும்புகளிடமிருந்து.**பூமியில்பிணைந்த வாழ்க்கைமண் புழுக்கள்**நிர்வாண குளியலைஒழிந்து பார்த்து ரசித்ததுசுவற்று பல்லி**கண்ணீரால்தான்கடல் கசந்ததோமீன்கள்**கனவில்லை காரணம் தூக்கமில்லைஓசை காதை பிளந்ததுகொசுக்கடி**ரங்கோலிஏமாற்றம்பசியுடன் எறும்புகள்**

By | 2006-07-11T06:38:00+00:00 July 11th, 2006|கவிதை|7 Comments

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா? ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். [...]

தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)uyirin uyirae...uyirin uyiraenadhiyin madiyil kaathu kidaikindreaneera alaigaL neerai vaari mughathil iraithummuzhudhum vaerkindreanகண்ணின் மணியே கண்ணின் மணியேஉலகில் உதிக்க பார்த்து இருந்தேனேகருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்உணர்வில் ரசித்தேனேnagarum neruppai kozhundhu vetterindean...aNaindha pinbhum...analin maelirundeankaalaipaniyaaga yeNNai vaarikondaaynaeram kooda yedhiri aagivida...yughaNgaL aaga vaedam maarivida...aNaththu kondaayae...pinbhu yaenoa sendraayஅசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்பார்த்தும் பூத்தும் ... காத்துக் கொண்டிருந்தேன்சிப்பி முத்தாக [...]

By | 2006-07-09T06:12:00+00:00 July 9th, 2006|கவிதை|3 Comments

பெண்ணே…

கொலை செய்தால் ஊரறியவலி அவளுக்குள்கருசிதைவு**பெண்கள் கேட்டால் -விபச்சாரம்ஆண்கள் கேட்டால்வரதட்சணை**நாளைய கல்பனாசாவ்லாவைஇரையாக்கினால் கள்ளிப்பாலுக்குபெண் சிசுக் கொலை**சாதி தீயினால்துணிந்து எரிந்தால்‘சத்தி’**தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்அம்பலத்தில் ஆடினால்அழகி போட்டி**

By | 2006-07-04T12:16:00+00:00 July 4th, 2006|கவிதை|12 Comments

துளிப்பா

எச்சிலை சேர்த்துதாகத்தை துளைத்தார்தண்ணீர் பஞ்சம்**உயிர்மேட்டுக்குடி பகற்டுடுப்பானதுபட்டு பூச்சி**முகத்தில்அழகிய வளைவுசிரிப்பு.**மனம் அறிந்து கூறினேன்மனம் அழுததுகாயப்படுத்திய பொய்**மாலை காற்றில்கலைந்தது வண்ணம்காலை பொழுது.**

By | 2006-07-04T06:38:00+00:00 July 4th, 2006|கவிதை|6 Comments

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமாவான் உலகை மறக்குமாஉலகம் பூமியை மறக்குமாபூமி நிலத்தை மறக்குமாநிலம் பாதையை மறக்குமாபாதை கால்சுவடை மறக்குமாகால்சுவடு உரிய கால்களை மறக்குமாகால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமாகண்கள் காக்கும் இமையை மறக்குமாஇமை உடலை மறக்குமாஉடல் உயிரை மறக்குமாஉயிர் எதுவும் மறக்குமாஎதுவும் எதையும் மறக்காத போதுஎன்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

By | 2006-07-03T07:06:00+00:00 July 3rd, 2006|கவிதை|2 Comments

அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடிகண்களில் மழை வந்ததுதேங்கி நின்றது பிரிவு.**இரு கைகளுக்கு நடுவேநகர்கிறது நாட்கள்குயவன்.**சூரியனுக்கு கீழ்எல்லாம் வெளிச்சம்கடற்கரை குளியல்**மயங்க வைத்ததும் அதுதான்காயப்படுத்தியதும் அதுதான்சுழறும் நாக்கு.**

By | 2006-07-02T13:36:00+00:00 July 2nd, 2006|கவிதை|3 Comments

போலி வார்த்தைகள்

உன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்நீ வீசும் பார்வையின் ஒளிஎன்னை வந்து கிள்ளுது.உன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்நீ விடும் மூச்சு காத்துஉன் ஏக்கம் சொல்லி கொல்லுதுஉன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகிமேகமழையோடு என்னை தொட்டு செல்லுதுஉன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்என்னை அணைத்து என்னமோ பண்ணுதுமனதால் உணர்த்தும் காதல் போதும்வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!

By | 2006-06-27T11:48:00+00:00 June 27th, 2006|கவிதை|8 Comments

எப்போது நுழைந்தாய் என்னுள்?

கல் தோன்றி மண் தோன்றாகாலத்தில் தோன்றியிருப்பினும்வயதில்லாமல் திரிவதால்வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?மனதிற்கு அருகில் இருக்கும்கருவறையில் கற்க தொடங்கியதால்உள்ளத்தை மட்டுமேவிரும்பச் செய்தாயோ?கண்டவுடன் வராததால்நட்பாக விதைத்தாயோ?வேற்று கருத்து வாக்குவாதத்தின்வெற்றியில் வேருட்டாயோ?மின்னஞ்சல்களை கண்டுமின்னலடித்ததில் முளைத்தாயோ?என்னைவிட அதிகம்என்னை அறிந்திருந்ததில்அடைப்பட்டேனோ?என்னை எனக்கேஉணர்த்தி உயர்த்த நினைத்ததில்உறைந்தேனோ?தொலைவில் நீ சென்றால்தவிப்பில் நான் தொலைந்தேன்!அழையா விருந்தாளியாகவந்துவிட்டதால்மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.தோற்றது நானென்றாலும்ஜெயித்தது காதல்தானே!

By | 2006-06-26T12:16:00+00:00 June 26th, 2006|கவிதை|5 Comments