About Jazeela Banu

This author has not yet filled in any details.
So far Jazeela Banu has created 164 blog entries.

துபாயில்…

துபாய் நகராட்சிக்கு ஒரு கோடி உடனே தரேன்னு சொல்லியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு கோடி தரேன்னு சொன்னது நானில்ல. ஒரு பணக்கார வியாபாரி. ஒரு கோடி ரூபாய்ன்னா நம்ம ஊருபணமில்ல. ஒரு கோடி திர்ஹம்ஸ் அதாவது பதிமூணு கோடி ரூபா. எதுக்கு தரேன்னு சொன்னாரு தெரியுமா?ஒரு அதிசய மீனுக்கு. அப்படி என்ன அதிசயம் தெரியுமா? அந்த மீன் உடம்பு மேல 'அல்லாஹ்'ன்னு அரபி எழுத்துல எழுதிருப்பது அழகா துல்லியமா தெரியுது.இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா [...]

By | 2006-08-22T10:21:00+00:00 August 22nd, 2006|அமீரகம்|16 Comments

அம்மா தாயே…

யாருடா அது பதிவு போட்டு பிச்ச கேட்குறாங்கன்னு பார்க்கிறீங்களா? பிச்சைதாங்க இது ஒரு வகையான வேண்டுகோள் பிச்சைன்னே வச்சிப்போம்.பசின்னா பத்தும் பறந்துடும்ன்னு படிச்சவங்க, பெரியவங்க சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த உலகத்துல பல பகுதில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாதவங்க எத்தனையோ சனங்க இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நம்ம வீட்டுல தின் பண்டங்கள, சமச்ச பதார்த்தங்கள வீணடிக்கிறோம். தெரிஞ்சா செய்றோன்னு கேள்வி வரும். தெரிஞ்சோ தெரியாமலோ மிச்சம் வைக்கிறீங்களா இல்லையா, அது தவறுன்னு நெனச்சு மட்டும் என்ன பிரயோசனம், [...]

By | 2006-08-14T06:50:00+00:00 August 14th, 2006|அக்கறை|13 Comments

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்பெற்ற உறவில்லைபின்னாளில்உற்ற உறவும் இல்லைஉன் சந்திப்பேஎன் சந்தோஷமானதுமலிவாக மகிழ்ச்சி என்றால்அதன் மறுபெயர் நீ என்பேன்என் பிரச்சனைகளுக்குயோசனை கிடங்கானாய்பாதிப்பில் பாசி படிந்தால்பூசி தேற்றுபவன் நீ தானேஎன் அறிவு வறுமையிலும்ஆதரவாய் நீ நின்றாய்நீயே என்இன்பத்தின் ஆரம்பம்தவிப்பின் துணைதனிமையின் தீர்வுதுன்பத்தின் தேடல்என் உளறல்களையும்காது கொடுத்து கேட்டாய்பதிலாக கனிவாய் மொழி பேசினாய்கருணை பார்வை வீசினாய்தேவைக்கு தோள் கொடுத்தாய்என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்புதிய பிரதிநிதியேநீ என்சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோஇல்லாதபோதுஉணர்வால் உணர்த்தியஉறவில்லாத உறவாகஎங்ஙனம் முளைத்தாய்?

By | 2006-08-07T09:58:00+00:00 August 7th, 2006|கவிதை|17 Comments

நெஞ்சு பொறுக்குதில்லையே…

போடும் பருக்கைகளைபகிர்ந்து உண்டு பழகிவிட்டதுபறவை இனம்நாய் பூனையும் கூடசேர்ந்து உண்ணகற்றுக் கொண்டதுமனிதர்களாகிய நாம்தாம்தவித்தாலும் தாகத்தைதொலைக்க தவிர்க்கிறோம்நதிநீரை

By | 2006-07-31T08:13:00+00:00 July 31st, 2006|கவிதை|9 Comments

லேசா லேசா…

பூக்களின்வேர்வைபனித்துளிகள்**அலை அடித்துகலைந்த கற்பனைமணல் வீடு**விலைப்போகாதவேதனைக்குரிய விளைச்சல்முதிர்க்கன்னி**காக்கை பயந்ததோ இல்லையோகுழந்தையின் வயிறு நிறைந்ததுசோலைக்காட்டு பொம்மை**என் பெயர்கரைந்ததுஅவள் நாக்கில்**இந்த அனாதையுடன்விளையாட வந்துவிடுதாயில்லா பறவையே!**குஞ்சு பறவையேபறந்து போய்விடுபூனை வரும் நேரம்**உயரத்திலிருந்து விழும்உனக்கு வலிக்கவில்லையோஅருவி**

By | 2006-07-26T05:47:00+00:00 July 26th, 2006|கவிதை|16 Comments

இல்லாமை இல்லை!?

தானத்தில் சிறந்த தானம் எது?சமாதானம், நிதானம், பிரதானம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்.வரவில்லாத சேவை நிறுவனங்கள் (Non-profit organisation) பற்றியோ அல்லது உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்ற விஷயங்கள் பற்றியது என்று எதிர்பார்த்து விடாதீர்கள்.நான் சொல்ல இல்ல இல்ல எழுத வருவது நம்மால முடிந்த செய்ய கூடிய சின்ன தரும சிந்தனைகள் பற்றியது.தானம் என்கிற இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் அடங்கி இருக்கின்றன். ஆனால் தானத்தின் அடிப்படையென்று பார்த்தால் அன்பு செலுத்துவதிலிருந்து ஆரம்பமாகுகிறது.ம்ருதுவாக்ய [...]

By | 2006-07-23T05:20:00+00:00 July 23rd, 2006|அக்கறை|7 Comments

தனி மரம்

பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.உள்ளே நுழைந்ததும் உடலே [...]

By | 2006-07-20T05:35:00+00:00 July 20th, 2006|சிறுகதை|2 Comments

ஆதங்கம்!

புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை**பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்சிளங்குழந்தை**உடையாமல் இருக்கஉடைத்தார்கள்பூசனிக்காய்**நீ தூங்கினாலும்சிணுங்கி எழுப்பியதுகொலுசு**மழையில் நனையாதபூமுழுநிலா**மழையில் நனையாமல் இருக்கநான் நனைந்தேன்குடை**உபசரித்து விரித்ததுமுடிந்த பின்எச்சில் இலை**காலி பணப்பைவெதும்பும் திருடன்கடன் அட்டை**உச்சரிப்பு சிதைவுஇந்திப் பாடகர்பிரபலமானது தமிழ்பாட்டு**நூறுநாள் ஓட்டம்தமிழ்படம்ஆங்கிலத்தில் தலைப்பு**

By | 2006-07-18T07:50:00+00:00 July 18th, 2006|கவிதை|13 Comments

திருமணம் – வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல [...]

குருதி வியர்வை

விவசாயின் காயம்மருந்துஉழவு மண்**செத்தால்தான்சோறுசாவு கூத்தாடி**கடன்பட்டவனின்இரத்த வாடைவட்டிப்பணம்**பிணம் எரிந்தால்தான்எரியும் வயிற்றுக்கு சோறுவெட்டியான் வாழ்க்கை**நிலத்தில் வயிற்றை கழுவவானத்தை நோக்கினர்விவசாயிகளின் வறுமை**உயர்ந்தது உன் கொள்கையெனகைத்தட்டி உயர்த்தி விட்டோம்உயர்ந்தது விலைவாசியும்.**எச்சிலை சேர்த்துதாகத்தை தொலைத்தனர்தண்ணீர் பஞ்சம்**பழைய சன்னல் திரையில்புது பாவாடைஏழை குடியாள்**

By | 2006-07-13T07:25:00+00:00 July 13th, 2006|கவிதை|10 Comments