நம்மைப் போல் ஒருவன்

இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் [...]

By | 2009-09-23T14:05:00+00:00 September 23rd, 2009|திரைவிமர்சனம்|43 Comments

விளையாட்டாக விவசாயம்

முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் [...]

குறையேதுமில்லை

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்றுஉலுக்கி பெறுகின்றாய்உகந்ததை தரவே செய்கின்றேன்உள்ளம் ஒன்றாமல்எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்பிடிக்காமல் போனாலும்சொல்லத்தான் செய்கிறோம்ஒன்றாய் வாழ்கிறோமென்று

By | 2009-08-31T11:31:00+00:00 August 31st, 2009|கவிதை|27 Comments

எல்லாம் யாருக்காக?

என் வயதொத்தபிள்ளைகள்கனவின் நடுவிலிருக்கநான் நித்திரை விட்டுகுளிர் நடுக்கத்தில்முக்காடில் நுழைந்துமதரஸா விரைந்தேன்புரியாத அரபி கற்கஅம்மம்மா மெச்சுதலுக்காக.அழைப்பு விடுத்தவுடன்கண்ணாமூச்சியில் கண்கட்டவும் மறந்துபுரியாமல் மனனம் செய்த பாடங்களை ஒப்பித்தபடிதொழுதேன்அன்புடன் அணைத்துக் கொள்ளும்அப்பாவுக்காகவிதவிதமான ஆடையில்தோழிகள்பள்ளி விழாவிற்குபவனி வரவெதும்பிய மனதைஹிஜாபில் ஒளித்தேன்பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்அம்மாவுக்காகவிவரம் தெரியாத வயது ஓய்ந்து பொருள் புரியாத மொழிபுலப்பட்டதும்அறிந்து கொண்டேன்ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்நிலையில்லா உறவுக்காக அல்லஒழுக்கத்தை விரும்பும்இறைவா எல்லாம் உனக்காகவென்று.

By | 2009-08-24T07:20:00+00:00 August 24th, 2009|கவிதை|19 Comments

இதென்ன கப்பிங் கலாட்டா?

'கப்பிங்' பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம். மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் [...]

உயரே பறக்கும் காற்றாடி….

"இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது" என்று வாழ்வியல் [...]

By | 2009-08-03T06:15:00+00:00 August 3rd, 2009|திரைவிமர்சனம்|17 Comments

வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!

அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை. நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் [...]

தொலைபேசியில் வந்த ஆபத்து: ‘Phone Booth’

நம்முடைய செயல்களில் மலிந்து கிடக்கும் பொய்களும் குற்றங்களும் யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை என்ற அலட்சியப் போக்கினாலேயே தவறுகள் தொடர்கின்றன. ஆனால் திடீரென ஒருவர் நம்மை நிறுத்தி நீ செய்யும் தவறுகளும் திருட்டுத்தனங்களும் எனக்குத் தெரியும், ஒரு வாய்ப்பு தருகிறேன் அதனை நீயே ஒப்புக்கொள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து மிரட்டுபவர்க்கு தேவையானதைத் தந்து வாயடைத்துவிடலாம், எதிர்பார்ப்பேயில்லாத ஒருவருக்கு? நம் இரகசியத்தைத் தெரிந்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், தண்டிக்க நினைப்பவர் இந்த [...]

By | 2009-07-27T07:28:00+00:00 July 27th, 2009|திரைவிமர்சனம்|21 Comments

இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!

சுத்தம் சுகாதாரம்னு நான் ரொம்பவே பார்ப்பேன். யாராவது எச்சில் செய்து தந்தப் பண்டத்தைக் கூட சாப்பிட மாட்டேன். அது எங்க அம்மாவானாலும் சரி தோழிகளானாலும் சரி. ஆனால் நான் அம்மாவாகிய பிறகு கொஞ்சம் மாறியிருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். இந்த காரணத்தினாலேயே நான் உணவகத்திற்கு சென்று சாப்பிட ரொம்பவே யோசிப்பேன். நல்ல உணவகமா, சுத்தமா வைத்திருக்கிறார்களா, பரிமாறுபவர்கள் சுத்தமா இருக்கிறார்களா, தட்டை ஒழுங்கா கழுவியிருக்காங்களான்னு முடிந்த வரைக்கும் கவனிப்பேன். என்னை வீட்டில் ‘ஒஸ்வாஸி’ன்னு சொல்வாங்க. இந்த ‘ஒஸ்வாஸி’ என்ற [...]

By | 2009-07-20T06:10:00+00:00 July 20th, 2009|அக்கறை|16 Comments

அழகான ‘கையெழுத்து’

They are providing us with the last mealThey would kill when the night is about to endWe shouldn't be there to die with pain when the sun risesMy dear love let's kill each other in this darkஅவசரமாக கடைசி உணவை பரிமாறினார்கள்அந்த இரவு முடியும் முன் நம் உயிரை பறிக்கவலியால் துடித்து சாக நாம் இருக்க கூடாது சூரியன் எழும்பும் முன்என் பிரியமானவளே [...]

By | 2009-07-13T09:40:00+00:00 July 13th, 2009|திரைவிமர்சனம்|20 Comments