தலையெழுத்தை மாற்ற முடியுமா?

எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே. ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது. இதில் எந்த நாட்டுப் பெண்களும் விதிவிலக்கல்ல. பிறந்தவுடன் தந்தையை, தந்தையில்லாமல் போனால் குடும்பத்தில் உள்ள ஆண்களை அதாவது அண்ணன்- தம்பி / மாமன் -மச்சான் என்று யாராவது, திருமணத்திற்குப் பிறகு [...]

கப்பலுக்குப் போன மச்சான் – வாசிப்பனுபவம்

வெளிநாடு போக எப்படியெல்லாம் அல்லல்பட வேண்டியுள்ளது, எத்தனை சிரமங்களையும் வாழ்வின் கரடுமுரடான பாதைகளையும் கடக்கவிருக்கிறது என்பதைப் புலம்பாமலும், சோகத்தைக் கொட்டிச் சாகடிக்காமலும், தனக்கே உண்டான மெல்லிய நகைச்சுவையோடு வடித்திருக்கிறார் நாகூர் ரூமி. மும்பாய்க்கே அழைத்து சென்று அவருடன் சுற்றச் செய்து கழிப்பறை பிரச்சனையிலிருந்து சாப்பாடு- உறக்கப் பிரச்சனை வரை எல்லாவற்றையும் விவரிக்கிறார்.வெளிநாடு சென்று கஷ்டப்படுகிறவர்களுக்கும் வெளிநாடு செல்ல கஷ்டப்படுகிறவர்களுக்கும் என்று சமர்ப்பணத்துடன் ஆரம்பிக்கும் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற இந்தக் குறுநாவல் சந்தியா பதிப்பக வெளியீடு.படிப்பவருக்கு 'வெளிநாடு [...]

நட்சத்திரப் போட்டி

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கிறது சிறகை விரித்து பறக்க முயற்சி செய்கிறேன். உங்களையெல்லாம் வானமென்று வானளவில் உயர்த்தியவுடன் உச்சி குளிர்ந்திருக்குமே? ஆனால் என் வலைப்பூவை வந்து எட்டிப் பார்ப்பவர்கள் மட்டும்தான் வானம் :-)கிறுக்கல் என்று பெயர் வைத்திருந்தும், என்னையும் ஒரு வலையாளியாக மதித்து நட்சத்திரமாக்கி, தமிழ்மண வானத்தில் மேகங்கள் நகர்ந்து சென்றாலும் இந்த நட்சத்திரம் மட்டும் முதல் பக்கத்திலிருந்து மறைந்து விடாமல் மின்னி அப்படியே நிற்கச் செய்து, எல்லோர் கண்களிலும் பட வைத்து, (பட வைத்தாலும் [...]

By | 2007-04-02T05:30:00+00:00 April 2nd, 2007|நட்சத்திரம்|48 Comments

தமிழ் சாகடிக்கப்படுகிறது!?

என்னதான் பல்வேறு வகையான ஊடகங்கள் இருந்தாலும் வான் அலைகள் மூலம் கேட்கப்படும் விஷயங்கள் அப்படியே மனதில் பதியத்தான் செய்கின்றன. தொலைக்காட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். ஏழைகளுக்கும் எளிமையாகக் கிடைக்கக் கூடியது இந்த வானொலி சேவைதான். இலங்கையின் முதல்தர வானொலி சக்தி எப்.எம். அமீரகத்தில் தொடங்குகிறார்கள் என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். தரமான நிகழ்ச்சிகளை தரமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மூலம் கிடைக்கும் என்று [...]

By | 2007-03-20T14:02:00+00:00 March 20th, 2007|அக்கறை|21 Comments

மகளிர் தினம் அவசியமா?

பெண்கள் தினமென்று ஊரெல்லாம் கொண்டாடுறாங்களே அது எப்படி வந்தது தெரியுமா? உழைக்கும் மகளிர் தினமாக இருந்ததுதான் இப்ப வெறும் 'பெண்கள் தினம்' என்ற பெயரில் தொலைக்காட்சியில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், வானொலியில் பெண்கள் சம்பந்தப்பட்ட பாடல்களுமாகச் சுருங்கி விட்டது.. பெண் சம்பந்தப்பட்ட பாடலென்றால் பெண் ஒரு தாயாக, மனைவியாக, மகளாக, சகோதரியாக இருக்கும் பாடல்களை 'பெண்கள் தின'த்திற்கான சிறப்பு நிகழ்ச்சியாக தருகிறார்கள். அது போதாதென்று பத்திரிகைகளும் 'சிறப்பு மலர்கள்' அனுமதிக்கிறார்கள். இப்படிச் செய்வதால் பெண்கள் தினம் முழுமையடைந்து [...]

By | 2007-03-08T05:25:00+00:00 March 8th, 2007|பெண்ணியம்|14 Comments

காதல் வாகனம்

காதலுக்கு ஏற்ற வண்டி, உலகில எந்த வண்டி, இப்போதே சொல்லுங்க வலைஞர்களே எவ்வண்டி நல்ல வண்டி?1. ரெக்கை கட்டி பறக்கும் சைக்கிள் பிடிக்குமா?2. மோட்டார் பைக் பிடிக்குமா?3. மோட்டார் கார் பிடிக்குமா?4. பேருந்து பிடிக்குமா?வண்டில்லாம் எதுக்குங்க? என்னவளு(னு)டைய கையக்கோர்த்துக்கிட்டு பொடி நடையா நடக்கத்தான் பிடிக்கும்ன்னும் சொல்றவங்களும் இருப்பாங்க. எது யாருக்கு பிடிக்குதோ தெரியாது, எனக்கு பைக்குன்னா ரொம்ப பிடிக்கும். இங்க பைக்ல சுத்த முடியாததாலயோ, கைக்கெட்டாததாலயோ ரொம்பப் பிடிச்சுப் போச்சோ என்னவோ??ஆனா பைக்ல போகும் போதெல்லாம் நெனைப்பேன் [...]

திருந்துங்க பெண்களே!

காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் கொண்டு சரியென்றேன். என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் [...]

By | 2007-02-21T11:28:00+00:00 February 21st, 2007|அக்கறை, பெண்ணியம்|26 Comments

கைக்கு எட்டியது

அக்கம் பக்கத்து பசங்களுடன் மலிவான மட்டைகள் வாங்கி அதில் கோழியிறகு பூ வைத்து பிரமாதமாக விளையாடுவதாக நினைத்துக் கொள்வேன். அதுதான் டென்னிஸ் என்பதுபோல் பிரம்மையுடன் அது மிக சுலபமான விளையாட்டு என்றும் நினைத்துக் கொள்வேன். என் அக்காவின் கணவர் ஒரு டென்னிஸ் கோச்சர். அவர்களிடம் எனக்கும் விளையாட ஆர்வம், உங்க மாணவிகளைவிட நல்ல விளையாடுவேன் என்று புருடா விட்டு, அவர்கள் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு என்னையும் அழைத்து செல்ல செய்தேன். அங்கு போய் பார்த்தால் பந்தை வைத்து [...]

By | 2007-02-19T15:34:00+00:00 February 19th, 2007|அமீரகம்|4 Comments

அன்பர்கள் தினம்

எல்லா வலைப் பதிவர்களுக்கும் பூங்கொத்தும், இனிப்பும் அனுப்புவதாகத் திட்டம்*. தங்களுடைய புகைப்படத்தையும் முகவரியையும் தனிமடலில் அனுப்பினால் குலுக்கல் முறையில் இல்லை இல்லை சிறந்த முகங்களை ஒரு சுமாரான முகம் தேர்வு செய்து 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்தப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.* சொந்த படமாக இருக்க வேண்டும்.* உங்க படத்தை நீங்களே எடுத்ததாக இருக்க வேண்டும்.* படத்தின் அளவு 4 x 6 ஆக இருக்க வேண்டும்.* படத்தின் கோப்பு 256KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.* அனுப்ப வேண்டிய [...]

By | 2007-02-14T10:57:00+00:00 February 14th, 2007|அக்கறை|2 Comments

அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?

பள்ளி பருவத்தில் வள்ளுவர் கோட்டம் போகலாம் என்று தோழிகளெல்லாம் திட்டம் போட்டால் அது காதலர்கள் சந்திக்கும் இடமென்று ஆளாளுக்கு தமது காதலனையும் அங்கு வரவைக்க திட்டம் போட்டார்கள். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 'டாஷ்' என்று அர்த்தம் என்று அந்த வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று நினைத்திருந்த காலத்தில் காதல் செய்யும் தோழிகளை கெட்ட பெண்கள் பட்டியலில் சேர்த்துவிட்டு வள்ளுவர் கோட்டம் போகாமல் ஜகா வாங்கிவிட்டேன்.ஆறு வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் [...]

By | 2007-02-10T11:01:00+00:00 February 10th, 2007|அக்கறை|9 Comments