தனி மரம்
பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.உள்ளே நுழைந்ததும் உடலே [...]