சின்ன சின்ன ஊடல் – குட்டிக்கதை

சின்ன சின்ன ஊடல்'எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்' என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று சுதந்திர தினம், புத்தம் புது ஆடை அணிந்துக் கொண்டாள், இனிப்பையும் எடுத்துக் கொண்டாள் வெள்ளைக்காரனிடம் வேலை பார்ப்பதால் சுதந்திர தினத்தை அவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நிறுவனத்தில் நிறைய இந்தியர்கள் என்பதால் நிர்வாகமே சுதந்திர தினத்தன்று எல்லாருக்கு 'டோனட்' வழங்கியது. இந்தியர்கள் பேரைச் சொல்லி அனைத்து நாட்டினரும் உண்டு [...]

By | 2006-08-31T07:48:00+00:00 August 31st, 2006|சிறுகதை|8 Comments

‘வேட்டையாடு விளையாடு’

பொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை பெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்களும் 'சுமார்', 'போர்', [...]

By | 2006-08-26T10:17:00+00:00 August 26th, 2006|திரைவிமர்சனம்|18 Comments

துபாயில்…

துபாய் நகராட்சிக்கு ஒரு கோடி உடனே தரேன்னு சொல்லியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு கோடி தரேன்னு சொன்னது நானில்ல. ஒரு பணக்கார வியாபாரி. ஒரு கோடி ரூபாய்ன்னா நம்ம ஊருபணமில்ல. ஒரு கோடி திர்ஹம்ஸ் அதாவது பதிமூணு கோடி ரூபா. எதுக்கு தரேன்னு சொன்னாரு தெரியுமா?ஒரு அதிசய மீனுக்கு. அப்படி என்ன அதிசயம் தெரியுமா? அந்த மீன் உடம்பு மேல 'அல்லாஹ்'ன்னு அரபி எழுத்துல எழுதிருப்பது அழகா துல்லியமா தெரியுது.இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா [...]

By | 2006-08-22T10:21:00+00:00 August 22nd, 2006|அமீரகம்|16 Comments

அம்மா தாயே…

யாருடா அது பதிவு போட்டு பிச்ச கேட்குறாங்கன்னு பார்க்கிறீங்களா? பிச்சைதாங்க இது ஒரு வகையான வேண்டுகோள் பிச்சைன்னே வச்சிப்போம்.பசின்னா பத்தும் பறந்துடும்ன்னு படிச்சவங்க, பெரியவங்க சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த உலகத்துல பல பகுதில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாதவங்க எத்தனையோ சனங்க இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நம்ம வீட்டுல தின் பண்டங்கள, சமச்ச பதார்த்தங்கள வீணடிக்கிறோம். தெரிஞ்சா செய்றோன்னு கேள்வி வரும். தெரிஞ்சோ தெரியாமலோ மிச்சம் வைக்கிறீங்களா இல்லையா, அது தவறுன்னு நெனச்சு மட்டும் என்ன பிரயோசனம், [...]

By | 2006-08-14T06:50:00+00:00 August 14th, 2006|அக்கறை|13 Comments

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்பெற்ற உறவில்லைபின்னாளில்உற்ற உறவும் இல்லைஉன் சந்திப்பேஎன் சந்தோஷமானதுமலிவாக மகிழ்ச்சி என்றால்அதன் மறுபெயர் நீ என்பேன்என் பிரச்சனைகளுக்குயோசனை கிடங்கானாய்பாதிப்பில் பாசி படிந்தால்பூசி தேற்றுபவன் நீ தானேஎன் அறிவு வறுமையிலும்ஆதரவாய் நீ நின்றாய்நீயே என்இன்பத்தின் ஆரம்பம்தவிப்பின் துணைதனிமையின் தீர்வுதுன்பத்தின் தேடல்என் உளறல்களையும்காது கொடுத்து கேட்டாய்பதிலாக கனிவாய் மொழி பேசினாய்கருணை பார்வை வீசினாய்தேவைக்கு தோள் கொடுத்தாய்என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்புதிய பிரதிநிதியேநீ என்சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோஇல்லாதபோதுஉணர்வால் உணர்த்தியஉறவில்லாத உறவாகஎங்ஙனம் முளைத்தாய்?

By | 2006-08-07T09:58:00+00:00 August 7th, 2006|கவிதை|17 Comments