உறவில்லாத உறவு

பிறந்தவுடன்
பெற்ற உறவில்லை
பின்னாளில்
உற்ற உறவும் இல்லை

உன் சந்திப்பே
என் சந்தோஷமானது
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
என் பிரச்சனைகளுக்கு
யோசனை கிடங்கானாய்
பாதிப்பில் பாசி படிந்தால்
பூசி தேற்றுபவன் நீ தானே
என் அறிவு வறுமையிலும்
ஆதரவாய் நீ நின்றாய்

நீயே என்
இன்பத்தின் ஆரம்பம்
தவிப்பின் துணை
தனிமையின் தீர்வு
துன்பத்தின் தேடல்

என் உளறல்களையும்
காது கொடுத்து கேட்டாய்
பதிலாக கனிவாய் மொழி பேசினாய்
கருணை பார்வை வீசினாய்
தேவைக்கு தோள் கொடுத்தாய்

என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்
புதிய பிரதிநிதியே
நீ என்
சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,
காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோ
இல்லாதபோது
உணர்வால் உணர்த்திய
உறவில்லாத உறவாக
எங்ஙனம் முளைத்தாய்?

By | 2006-08-07T09:58:00+00:00 August 7th, 2006|கவிதை|17 Comments

17 Comments

  1. சந்திப்பு August 7, 2006 at 11:57 am - Reply

    ஜெசிலா கவிதை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. அதில் உள்ளக் கொதிப்பும் வெளிப்படுகிறது.

    அந்த துன்பத்தின் தேடல்?

    தங்கள் கவிதை மிளிர வாழ்த்துக்கள்!

  2. (துபாய்) ராஜா August 7, 2006 at 11:57 am - Reply

    ஜெஸிலா,நன்றாக உள்ளது.நண்பர்கள்
    தினக்கவிதை இது ??!!.

  3. G Gowtham August 7, 2006 at 1:33 pm - Reply

    நட்பின் வலிமை இது!
    ‘அதே வானம்
    அதே நிலவு
    நான் மட்டும் புதிதாய்’ என்று ஆரம்பித்து
    ‘இத்தனை நாளாய்
    எங்கு இருந்தாய்
    அடியே சகியே!’ என முடிவதாய்
    பல வருடங்களுக்கு முன்னால்
    என்னால் கிறுக்கப்பட்ட கவிதை ஒன்றை நினைவு படுத்தியது உங்கள் கவிதை!
    வாழ்த்துக்கள்

  4. ஜெஸிலா August 7, 2006 at 2:39 pm - Reply

    நன்றி பெருமாள்.

    ராஜா, சரியா கண்டுபிடிச்ச பிறகு எதுக்கு கேள்விக்குறி?

    கெளதம், அந்த கவிதை உங்க வலைப்பூல இருந்தா சுட்டியை தந்திருக்கலாமே.

  5. இராம் August 8, 2006 at 7:26 am - Reply

    ஜெசிலா,

    நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்… 🙂

  6. ஜெஸிலா
    என்ன வென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் சிந்தனைகளை…

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும் உணர்வு.

    வாழ்த்துக்கள்!

  7. ஜெஸிலா August 10, 2006 at 5:07 am - Reply

    ராமுக்கும், ஏ.எம். ரஹ்மானுக்கும் நன்றிகள்.

  8. தம்பி August 12, 2006 at 2:13 pm - Reply

    ஜெஸிலாக்கா,

    கவிதை நல்லா இருக்கு,

    http://umakathir.blogspot.com/2006/08/blog-post_11.html

    இங்க பாருங்க,
    தேறுமான்னு பாத்து சொல்லுங்க

  9. நல்ல கவிதை.

  10. மதுமிதா August 23, 2006 at 6:40 am - Reply

    நன்று ஜெசிலா

    ///
    மலிவாக மகிழ்ச்சி என்றால்
    அதன் மறுபெயர் நீ என்பேன்
    ///

  11. ஜெஸிலா August 23, 2006 at 7:09 am - Reply

    கதிர், பார்த்தேன் ஓட்டும் போட்டேன். நன்றி.

    நன்றி இப்னு.

    நன்றி மதுமிதா.

  12. abilasha September 5, 2006 at 12:20 pm - Reply

    your poetry is very nice.but i feel guilty in one line that is “malivana maghizhchi endral adhu needhan” because friendship is not based on once financial position………it is far apart than that.it is my point of view. if this comment hurts you then i am really so sorry…..’ALL THE BEST FOR YOUR FUTURE WRITINGS”…

  13. ஜெஸிலா September 5, 2006 at 1:35 pm - Reply

    நன்றி அபிலாஷா //”malivana maghizhchi endral adhu needhan” because friendship is not based on once financial position.// தவறாக புரிந்துக் கொண்டீர்கள். மலிவான மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருப்பது நட்பை பணத்தை பற்றி எடைப்போடுவதாக எடுத்துக் கொண்டுள்ளீர்கள் அப்படியல்ல மகிழ்ச்சி கிடைக்க சிலர் நிறைய செலவளிக்க வேண்டியிருக்கும். ஆனால் நண்பனை கண்டாலே மகிழ்ச்சி என்பது ‘மலிவு’தானே அதைதான் அப்படி சொல்லியிருக்கிறேன். இப்போ சமாதானமாச்சா?

  14. abilasha September 6, 2006 at 11:26 am - Reply

    thank you jazeela.sorry i am mistaken……really it’s nice

  15. Anonymous October 4, 2006 at 8:11 am - Reply

    Assalamu Alaikum
    Hi Jazeela Sister
    I am Sabireen From Trichy in Tamil Nadu
    Your Web Pages super what are you ding in dubai.

  16. மலிவாக மகிழ்ச்சி என்றால்
    அதன் மறுபெயர் நீ என்பேன்
    வாழ்த்துக்கள்

  17. G Gowtham January 8, 2007 at 11:21 am - Reply

    //கெளதம், அந்த கவிதை உங்க வலைப்பூல இருந்தா சுட்டியை தந்திருக்கலாமே. //
    இல்லை ஜெஸிலா,
    உதிராத வண்ணச் சிறகுடன் என்னைக் கடந்துபோன (வார்த்தைப் பிரயோகம் : இந்த வார குங்குமத்தில் வெளியான ராசுக்குட்டியின் வலைப்பூவாளி) ஒரு தோழியை நினைத்து நான் கிறுக்கிய கவிதை அது.
    மற்றபடி கவிஞர்கள் வரிசையில் நான் இல்லாததால் வலைப்பூவில் கவிதை பரி’சோதனை’யெல்லாம் செய்யவில்லை.
    நினைவுபடுத்திப் பார்க்க முயல்கிறேன். சிற்றறிவுக்குச் சிக்கினால் எழுதுகிறேன்.

Leave A Comment