குறையேதுமில்லை

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்றுஉலுக்கி பெறுகின்றாய்உகந்ததை தரவே செய்கின்றேன்உள்ளம் ஒன்றாமல்எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்பிடிக்காமல் போனாலும்சொல்லத்தான் செய்கிறோம்ஒன்றாய் வாழ்கிறோமென்று

By | 2009-08-31T11:31:00+00:00 August 31st, 2009|கவிதை|27 Comments

எல்லாம் யாருக்காக?

என் வயதொத்தபிள்ளைகள்கனவின் நடுவிலிருக்கநான் நித்திரை விட்டுகுளிர் நடுக்கத்தில்முக்காடில் நுழைந்துமதரஸா விரைந்தேன்புரியாத அரபி கற்கஅம்மம்மா மெச்சுதலுக்காக.அழைப்பு விடுத்தவுடன்கண்ணாமூச்சியில் கண்கட்டவும் மறந்துபுரியாமல் மனனம் செய்த பாடங்களை ஒப்பித்தபடிதொழுதேன்அன்புடன் அணைத்துக் கொள்ளும்அப்பாவுக்காகவிதவிதமான ஆடையில்தோழிகள்பள்ளி விழாவிற்குபவனி வரவெதும்பிய மனதைஹிஜாபில் ஒளித்தேன்பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்அம்மாவுக்காகவிவரம் தெரியாத வயது ஓய்ந்து பொருள் புரியாத மொழிபுலப்பட்டதும்அறிந்து கொண்டேன்ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்நிலையில்லா உறவுக்காக அல்லஒழுக்கத்தை விரும்பும்இறைவா எல்லாம் உனக்காகவென்று.

By | 2009-08-24T07:20:00+00:00 August 24th, 2009|கவிதை|19 Comments

இதென்ன கப்பிங் கலாட்டா?

'கப்பிங்' பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம். மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் [...]

உயரே பறக்கும் காற்றாடி….

"இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது" என்று வாழ்வியல் [...]

By | 2009-08-03T06:15:00+00:00 August 3rd, 2009|திரைவிமர்சனம்|17 Comments