வாழ்வே உனக்காக

கால காலமாக இயற்கையோடுவளர்ந்த நான்அதை இரசிக்க மறந்ததேனோ?உன்னுடன் காலம் கடந்த போதுஎல்லாம் புது உலகமாக மாறியதேனோ?புல் நுனியில் பனிதுளியில் இருந்துபூத்து குலுங்கும் பூக்கள் வரைபுதிதாக தோன்றியது ஏனோ?புத்தம் புது பூமியாகஉன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?பிரிவென்றால் புரியாது இருந்தேன்பெற்றோரை விட்டு பிரிந்துஉன்னிடம் ஒப்படைக்கும் போது கூடஎனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?உன்னை பிரிந்த நாள் முதல்என்னைவிட்டு எல்லாம்தூரம் சென்றதாகஉணரும் உணர்வுதான் ஏனோ?உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்பல சந்ததியை கடந்ததாகபிறவிகள் பல கழித்தவளாகபல நாட்கள் பழகிய சிநேகிதமாகபலநூறு ஜென்மம் பேசியதாகநூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாகபிரியாத [...]

By | 2006-06-04T10:52:00+00:00 June 4th, 2006|கவிதை|7 Comments

பெட்டிக்குள் அடங்காதது

ஆண்கள் இயல்பு கொண்டஆண் வண்டுகள்மலர் விட்டு மலர் தாவிமூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்காட்டு பூக்களின்தேனை மட்டும் உண்ணாமல்துளைக்கவும் துடங்கியதுமூங்கிலை.தூது போன தென்றல்புல்லாங்குழலென எண்ணிமூங்கில் துளையில் நுழைந்துராகம் எழுப்பியது.மரங்கொத்தி ராகத்திற்கேற்பமரத்தை தட்டி தாளம் துவங்கியது.குயில் சூழலுக்கேற்பபாடி மகிழ்ந்ததுமர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாறபுல்வெளி மேடையாக இருக்கநேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆடவண்ண வண்ண விளக்காகவானவில் வந்து நிற்கஎழிலகத்தை காணஇரண்டு கண்கள் போதாதேஎன் புகைப்பட பெட்டி கூடஇவ்வழகிய காட்சியை அதனுள்பூட்ட நினைத்ததை எண்ணிஏலனமாக புன்னகையித்தது.

By | 2006-05-21T10:55:00+00:00 May 21st, 2006|கவிதை|2 Comments

புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்எனக்கோ குளிரின் நடுக்கம்.உன் மேல் ஏந்தான்வேர்வையோ?பாவம் நீ என்று நான் விசுறவேர்வைகள் உன்னுடன்உறவாடி ஒட்டிக்கொள்ளவிரல்களால் உன் வேர்வைதுடைக்க அச்சம்உன் துயில் கலைந்து விட்டால்?உற்று நோக்கி கொண்டிருக்கையில்சூரியன் எழுந்தான்உன் வேர்வைகளும் மறைந்தனவேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன

By | 2006-05-13T11:13:00+00:00 May 13th, 2006|கவிதை|0 Comments

குமுறல்

பிறந்த உனைதிறந்த மேனியாய் விடாசிறந்த துணியால் பொதித்தோம்வளரும் பருவத்தில்எமக்கு பிடித்ததெல்லாம்உடுத்தி பார்த்தோம்நிமிர்ந்த நடையும்நேர் கொண்ட பார்வையும்அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்வளர்ந்த பின்னேமறைக்க வேண்டியதை மூடவில்லைஅறிவுரைகளை கேட்கவில்லைபாராட்டும் பத்திரமும்புகழும் பெயரும்பொருளோடு சேர்த்துக் கொண்டாய்அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்எனக்கு பெருமையும் இல்லைஉன் மீது வெறுப்பும் இல்லைஉன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லைமன குமுறல்கள் பல இருந்தாலும்உன் மகிழ்ச்சிக்காகஎன் வாய் வளைந்தது புன்னகையாக

By | 2006-04-12T12:36:00+00:00 April 12th, 2006|கவிதை|0 Comments

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்துமனதில் பாரத்துடன்அரை வயிற்றுடன்கண்களில் மகிழ்ச்சியுடன்தலையில் கற்களை சுமக்கும்சித்தாளை கண்ட போதுவெட்கப்பட்டேன் எனக்குள்,அலுவலகத்தில் வேலை பளு எனக்குஎன்று சொல்லிக் கொள்ள.மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

By | 2006-04-10T09:43:00+00:00 April 10th, 2006|கவிதை|3 Comments

சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போதுகிடைத்த சங்கை காதில் வைத்தால்ஓ என்று எழும் சத்தம்ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்என்று அறியாது இருந்து விட்டோம்.வான நிறத்தை எடுத்துக் கொண்டுநீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்கொடிய எண்ணத்தை கொண்டதனால்அது உனக்கு கிடைத்த நிறம்என்று அறியாது இருந்து விட்டோம்உன்னிடம் உள்ள கடலினங்களைநாங்கள் கொன்று தின்றோமென்றால்உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்என்று அறியாது இருந்து விட்டோம்உணர்வுகள் நாங்கள் அறியஉப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்நீ உப்பாக [...]

By | 2006-04-09T07:01:00+00:00 April 9th, 2006|கவிதை|2 Comments

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்என்னை பார்க்கும் போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்?நான் சுதந்திர பறவையா?கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா?கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?நாகரீகம் அறியாதவளாகபிணைக்கப்பட்ட கைதியாகநான் தெரிகிறேனோ உனக்கு?எனகென்று சொந்த குரல்எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்மூடி மறைப்பது - கூண்டு கிளியா?முடியை மறைப்பது - அநாகரீகமா?காட்ட மறுப்பது - திணிப்பா?சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாகபரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயேகவலை, துயரம்கோபமும், வேதனனயும் எனக்குகண்களின் ஓரம் கண்ணீரும் இருக்குகண்ணீரின் காரணம்நீ என்னை ஒதுக்குவதாலும்உன் [...]

By | 2006-04-08T10:57:00+00:00 April 8th, 2006|கவிதை|9 Comments

விபத்து

முருங்க இலை பறிக்க மரமேறிமுழங்கால் சிராய்த்தும் அழாமல்ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனைபதறியடித்து தடவிக் கொடுத்தபல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லைகோலி உருட்டி விளையாடிஎறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்கபாவம் என்று பரிதாபப்பட்டுவிஷக்கடியாய் பாவித்து வலிபோக்கியவழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லைகாய்ச்சலில் சுருண்டதும்கோவில் வேண்டுதல்களும்பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்பெரிய விஷயமாகப்பட வில்லைபழுத்த முகத்தோடுபார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறிமுகம் தெரியாத நபர்களெல்லாம்விசாரித்து பக்குவம் சொல்லியதுஎப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லைபெருநகர நெரிசலில்இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனைபல்லவன் தட்டிச் செல்லஓரமாகக் குருதி வலிய உயிர் [...]

By | 2006-04-02T10:52:00+00:00 April 2nd, 2006|கவிதை|0 Comments

யார் காரணம்!?

கனவோடு மனமேடையேறிஇன்பமாய் இல்லறம் தொடங்கிவிரைவிலே உற்றவன் இறக்கநாட்பது கழிந்து வேலை தேடிசேரவும் செய்தேன்நானா காரணம்?இருள் சூழ்ந்த வாழ்க்கையில்விளக்காய் கிடைத்த வேலையைதெய்வமாக போற்றிகண்டவர் பார்வையை கடந்துசீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.துணிவா காரணம்?ஒரு வாரத்திலே தெரிந்ததுபுதிய துணை உண்டானது என்றுஇழந்த துயரை மறந்துகவசமான உயிரைகவனமாய் பாவித்தேன்.நம்பிக்கையா காரணம்?எதிர்ப்புகளே மிகுந்ததுஉணர்வுக்கு புரிதல் இல்லைஅழிக்க வற்புறுத்தல்தாங்ககூடிய சுமை என்றேன்கேட்பாரில்லை.காரணம் தந்தார்கள்சமுதாய சந்தேகம் என்று!

By | 2006-03-28T10:53:00+00:00 March 28th, 2006|கவிதை|0 Comments

தமிழ் இனி…

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னுமஅம்மா என்பதை பசுக்கள் மறவாது!காற்று நுழையாத குகையிலும்குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!புயலுக்கு மடிந்து சரியும்வாழைத்தரு அல்லநூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்ஆலமரம் நீ!வெள்ளையர்கள் வந்தாலும்மொகலாயர்கள் மேய்ந்தாலும்ஆரியர்கள் ஆண்டாலும்செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்தமுத்தாகவே கோர்த்து வைப்பேன்.பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்ஐந்திணையை வியக்க வைத்தாய்உன் புகழை அளந்தால்அந்த இமயம் கூட குட்டையே!உன்னைக் கொண்டுவெள்ளை நிலவை தங்கமாக்கலாம்வெள்ளரியையும் விரலாக்கலாம்கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளேஇசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றிநாவிற்கும் [...]

By | 2005-05-10T11:27:00+00:00 May 10th, 2005|கவிதை|10 Comments