வாழ்வே உனக்காக
கால காலமாக இயற்கையோடுவளர்ந்த நான்அதை இரசிக்க மறந்ததேனோ?உன்னுடன் காலம் கடந்த போதுஎல்லாம் புது உலகமாக மாறியதேனோ?புல் நுனியில் பனிதுளியில் இருந்துபூத்து குலுங்கும் பூக்கள் வரைபுதிதாக தோன்றியது ஏனோ?புத்தம் புது பூமியாகஉன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?பிரிவென்றால் புரியாது இருந்தேன்பெற்றோரை விட்டு பிரிந்துஉன்னிடம் ஒப்படைக்கும் போது கூடஎனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?உன்னை பிரிந்த நாள் முதல்என்னைவிட்டு எல்லாம்தூரம் சென்றதாகஉணரும் உணர்வுதான் ஏனோ?உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்பல சந்ததியை கடந்ததாகபிறவிகள் பல கழித்தவளாகபல நாட்கள் பழகிய சிநேகிதமாகபலநூறு ஜென்மம் பேசியதாகநூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாகபிரியாத [...]