வலைப்பதிவாளர்கள் தயாரா?

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய ‘ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்’ பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்’ படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் மகள் (தற்)கொலையே (?) நினைவுக்கு வந்தது. அதற்கு அடுத்த பதிவாக நான் படித்தது சுபா சுந்தரம் காலமாகிவிட்ட இரண்டு வருட பழையச் செய்தி. இந்த இரண்டு பதிவையும் அடுத்தடுத்து பாடித்தது தற்செயலாக சம்பவித்திருக்கலாம் ஆனால் எப்படி அப்படி என்று இழப்புகளையும் இறப்புகளையும் அசைப்போட்டுக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் நான் ஒரு பெரிய ’round-about’ஐ கடந்துக் கொண்டிருந்தேன். நான் நடு ‘டிராக்’கில் இருந்தேன் நேராக செல்வதற்காக. நேராக செல்கிறேன் என்று சுட்டிக்காட்டும் கருவியையும் (indicator) தட்டிவிட்டு ’round-about’ன் மத்தியில் கடக்க இருக்கும் போது பெரிய பேருந்து என்னுடைய வலதிலிருந்து இடப்பக்கம் திரும்புகிறது என்னுடைய சின்ன வண்டியை கவனிக்காமலேயே. பேருந்தின் ஒளி கண்சிமிட்டவே நான் கவனித்து ‘இறைவா உன்னுடைய காவல்’ என்று ஒரு கத்து கத்திவிட்டு அப்படியே இடப்பக்கமாக திரும்பினேன். ஓட்டுனரை திட்டவோ, horn அடிக்கவோ தோன்றவேயில்லை. ஓட்டுனரின் முகத்தைப் பார்த்தேன், என்னைவிட அவர் கண்ணில்தான் பயம் அதிகமாகத் தெரிந்தது. காரணம் இந்த ஊரின் சட்டத்திட்டம் அப்படி. நேற்று அந்த அசம்பா விதம் நடந்திருந்தால் அதே நொடியில் நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் விபத்துக்கு காரணமான அந்த ஓட்டுனர் வாழ்நாள் முழுவதும் கம்பிகளுக்குப் பின்னால்தான் சிறையில் வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று மறுபடியும் ஒரு முழு வட்டம் எடுத்து வந்தேன்.

அதன் பிறகு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மண்டைக்குள் ஓடியதெல்லாம் ‘நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்’ என்று (ரொம்ப கிறுக்குத்தனமா தெரியல?). ‘நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு’ நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு? கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே? இருந்தாலும் இதெல்லாம்தான் முதலில் வந்து நிற்கிறது எனக்கு. ‘ச்சே, என்ன ஒரு இயந்திர உலகில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று யோசித்தேன். சாவைப் பற்றி கண்டிப்பாக நான் பயப்படவில்லை என்பது மட்டும் விளங்கியது. ஆனால் சில ஜீவன்களுக்காக வருத்தப்பட்டேன். முதலில் என் மகள், தாயில்லாதவளாக வளர்வாளே என்று. அதற்கு அடுத்தபடியாக என் பெற்றோர். பெற்றோர்களுக்குப் பெரியக் கொடுமையே தன் குழந்தையை தமக்கு முன் இழப்பதுதான் என்பது என் அபிப்பிராயம். அப்படிப்பட்ட தண்டனையை என் பெற்றோருக்கு நான் தரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

இதே போல் போன வாரம் உடல்நிலை சரியில்லாத போதும் இப்படித்தான் சாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன் (நீங்க எப்பவாவது உங்க சாவைப் பற்றி யோசித்ததுண்டா?). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது!). அத்தோடு அந்த தருணத்தில் மண்டையில் உதித்த ‘சூப்பர்’ சிந்தனை என்னவென்றால் எல்லோரும் ஆறு, எட்டு, சுடர் என்று விளையாடுவது போல் என் மறைவுக்காக ஆளாளுக்கு ஒரு சின்ன கட்டுரை எழுத வேண்டும், தலைப்பு ‘நாளை உன் மரணம் நேர்ந்தால்’ எல்லோரும் கண்டிப்பாக மொக்கை இல்லாத தீவிர பதிவாக ஒவ்வொருவரும் மரணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கடமைகளை எப்படி ஒரே இரவில் முடிப்பீர்கள், எந்த அளவுக்கு தயாராக இருப்பீர்கள் என்று யோசிக்க வைக்க வேண்டுமென்றெல்லாம் கற்பனை. குறிப்பாக என் கடைசி பதிவில் ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று இருந்தேன். (என்னத்த பெருசா புதுசா கேட்டுவிட போறேன் – அதே அரைத்த புளித்த மாவுதான்)

1) சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் பதிவுகளை பதியாதீர்கள்.
2) தனி மனிதத் தாக்குதல்கள் வேண்டாம். பின்னூட்டம் போடுவது ஊக்கத்திற்காக இருக்க வேண்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
3) அனானி பின்னூட்டங்களை வெளியிடலாம் பதிவுக்கு தொடர்புடையதாக இருப்பின். அனாவசிய சம்பந்தமில்லாத பிரச்சனைகளை வளர்க்கும் ஜல்லியை தவிர்க்கலாம்.

இப்படிலாம் நான் சொன்னா மட்டும் திருந்திவிடவா போகிறார்கள் நம் மக்கள்? இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே? இப்படி நடக்குமென்றால் நான் சாக ரெடி, நீங்க திருந்த ரெடியா?

இப்படியெல்லாம் அப்போ அதாவது போன வாரம் என்னுடைய காய்ச்சலின் சீதோஷ்ண அளவு (temperature) 39° C இருந்த போது எழுத நினைத்தது. இதெல்லாம் சாக்காக வைத்து கொலை வெறியில் அலையாதீங்கப்பா.

By | 2007-07-18T11:16:00+00:00 July 18th, 2007|அக்கறை|44 Comments

44 Comments

  1. உண்மை ஜெஸிலா அதிகம் தொடர்பில் இல்லாமல் இருக்கும் நெருக்கமான நட்புகளுக்கு நம் இறப்பு போய்சேருமா என்ற கவலை எனக்கு கூட அடிக்கடி வரும்..யாராவட்து எப்படியாவது தெரிந்து கொண்டுவிடுவார்கள் என்று நினைப்பதுண்டு அப்போது..
    பரவாயில்லை சுரம்நன்றாகவே அடித்திருக்கிறது போலவே…இப்ப எழுதினதற்கே இப்படி என்றால் அப்போதைக்கப்போதே எழுதி இருந்தால் இன்னும் எப்படி சுட்டிருக்கும்.

  2. தம்பி July 18, 2007 at 11:59 am - Reply

    எல்லாருக்கும் வர்றதுதான் கொஞ்சம் அதிகமா பயந்துட்டிங்க.

    உடம்பு நல்லா இருந்துச்சின்னா சாவபத்தி கவலைப்படுவீங்களா? அவரவருக்கு வரும்போதுதான் தெரியும் விளக்கி சொன்னா புரிஞ்சிக்கற விஷயமா இது.

    //’நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு’ நீங்கள் நினைப்பது புரிகிறது //

    ச்சே ச்செ அப்படிலாம் இல்லங்க யாரும் அந்த மாதிரி நினைக்க மாட்டாங்க. ஒருவேளை இறந்துட்டிங்கன்னு தெரிஞ்சுதுன்னா ஒரு அஞ்சு பத்து நிமிஷம் வருத்தமா இருக்கும். பிறகு சரியா போயிடும்.அப்புறம் அவரவர் வேலைய பாத்து போயிட வேண்டியதுதான்.
    வேறென்ன இருக்கு இதை பத்தி சொல்லன்னு தெரில. 🙂

  3. jaseela July 18, 2007 at 11:59 am - Reply

    enna kodumai jazeela ithu? TV serial wenamdannu orediya othukki thallittu inga wantha …….ingayum oru ponnoda azhu kurala?……ayyaho…..

  4. அபி அப்பா July 18, 2007 at 11:59 am - Reply

    உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஏன் என்னையும் பீதி அடைய வக்கிறீங்க! ஆண்டவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி!

  5. வைசா July 18, 2007 at 12:35 pm - Reply

    // திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே? இப்படி நடக்குமென்றால் நான் சாக ரெடி, நீங்க திருந்த ரெடியா? //

    இப்படி வேறேயா? அப்படியென்றால் பதிவர்கள் திருந்தவே கூடாது!

    // என் மண்டைக்குள் ஓடியதெல்லாம் ‘நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்’ என்று //

    இது இங்குள்ள பல பதிவர்களுக்கும் (என்னையும் சேர்த்து) பொருந்தும் அல்லவா?

    வைசா

  6. jaseela July 18, 2007 at 12:37 pm - Reply

    thambiyum……abi appavum ungalukku nallawe aruthal solli irukkaanga……nalla sagotharargalai intha walai ulagil petratharku wazhthukkal…..:)

  7. சுல்தான் July 18, 2007 at 12:55 pm - Reply

    உண்மைதான். சில நேரங்களில் இதுபோல் எனக்கும் ஆனதுண்டு.

    சிறு வயதில், நான் மரித்த பின், என்னைக் குளிப்பாட்டி, கபனிட்டு (சவ ஆடை உடுத்தி), குழிக்குள் வைத்து எல்லோரும் திரும்பிப் போகிறார்கள். விழித்த பின் நீண்ட நேரம் அழுதேன்.
    ‘யாருக்கு என்ன நடந்தாலும் உலகம் தன் பாட்டையில் இயங்கிக் கொண்டேதானிருக்கும்.
    நாளையும், நேற்றும் இன்றும் போல் மற்றுமொரு நாளாக நன்றாகவே நடக்கும்’
    என்று ஒருவர் சொன்ன பிறகுதான் பயம் போனது.
    எனக்கு அப்போது சொன்னது – உனக்கு நீண்ட ஆயுள்.
    ஆம். அதற்கப்புறமும் 20 வருடம் கடந்து விட்டதே!.

    அடுத்து இந்த மாதிரி திரும்ப (turn) போறவன் சரியான ட்ராக் பார்த்து போக வேண்டியது மிக அவசியம். வாநாளெல்லாம் கம்பிகளுக்குள் கழிக்க தேவையிருக்காது – ‘தியா’ கொடுக்க நிறைய சிரமப்பட்டு, கொடுத்து, மறந்தும் போவான். அதனால் பாடம்: (என்னுடைய முதலாளி சொன்னது) பெரிய வண்டி மேல் சின்ன வண்டி விழுந்தாலும், சின்ன வண்டிமேல் பெரிய வண்டி விழுந்தாலும் அடிபடப் போவதென்னவோ சின்ன வண்டிக்குதான். அதனால் சின்ன வண்டிக் காரவுக ஒதுங்கி வழி விட வேண்டியதுதான்.

    கவனமாய் இருங்கள்.
    உங்களுக்கு மிக நீண்ட ஆயுள் இறைவன் அருளுவான்.

  8. ஜெஸிலா July 18, 2007 at 1:07 pm - Reply

    நன்றி முத்துலெட்சுமி. //இப்ப எழுதினதற்கே இப்படி என்றால் அப்போதைக்கப்போதே எழுதி இருந்தால் இன்னும் எப்படி சுட்டிருக்கும்.// இன்னும் நிறைய உளறிக் கொட்டிருப்பேன்.

    //ச்சே ச்செ அப்படிலாம் இல்லங்க யாரும் அந்த மாதிரி நினைக்க மாட்டாங்க. ஒருவேளை இறந்துட்டிங்கன்னு தெரிஞ்சுதுன்னா ஒரு அஞ்சு பத்து நிமிஷம் வருத்தமா இருக்கும்.// அப்பப்பா அதுவே பெரிய விஷயம் எனக்கு 🙂

    //enna kodumai jazeela ithu? // என்னக் கொடுமை சரவணன் என்ற மாதிரி இருக்கு. ஆமா எங்க நான் எங்க அழுதேன்? ச்சே போயும் போயும் என் பதிவை சீரியலோடு ஒப்பிட்டு கேவலப்படுத்திட்டீங்களே 😉

    உங்க அன்புக்கு நன்றி அபி அப்பா. ஆனா நான் கேட்டதுல என்ன தப்பு? வலையில் பார்க்கிறோம், பேசுறோம் அவ்வளவுதான். நாளைக்கே நான் செத்துட்டா யாரு உங்களுக்கு தகவல் தருவாங்க? ரொம்ப நாளா காணோமேன்னு ஒரு மடல் தட்டுவீங்க, அதற்கும் பதில் வராது. அப்புறம் விட்டுடுவீங்க அவ்வளவுதானே? இல்ல என் அதிர்ஷ்டம் யாராவது கண்ணீர் அஞ்சலி விளம்பரம் கொடுத்தா என் பெயரைப் பார்த்து சந்தேகத்தில் விசாரிப்பீங்க, அதற்குள் புதைத்த இடத்தில் புல் முளைத்துவிடும் 😉 என்னத்த சொல்ல உலகே அப்படித்தான் இருக்கு ;-(

  9. jaseela July 18, 2007 at 1:18 pm - Reply

    sulthan bhai!!!! what u have written about ur rebirth is really interesting…can u share that experience with us plz?….

  10. ஜெஸிலா July 18, 2007 at 1:26 pm - Reply

    // jaseela said…

    thambiyum……abi appavum ungalukku nallawe aruthal solli irukkaanga……nalla sagotharargalai intha walai ulagil petratharku wazhthukkal…..:) // ஜெசிலா, ஆனா நிஜமாவே நிறைய ‘அபூர்வ’ சகோதரர்கள் கிடைச்சிருக்காங்கன்னு சொன்னா மிகையாகாது 😉

    //இது இங்குள்ள பல பதிவர்களுக்கும் (என்னையும் சேர்த்து) பொருந்தும் அல்லவா?// ம்ம் ஆமாம் வைசா, அதற்கு என்ன செய்யலாம்? இப்பவே அறிவித்து reaction பார்த்துவிடலாமா 😉

    சுல்தான் அண்ணே, உண்மையில் இறப்பது போல் கனவுக் கண்டால் நீண்ட ஆயுள்ன்னு சொல்லுவாங்க. 20 என்ன இன்னும் 40 வருடத்திற்கு மேல் இருப்பீங்க. வாழ்த்தியமைக்கு நன்றி. அப்புறம் ஜெசிலாக்காக உங்க அனுபவத்தை பதிவா பேட்டிடுங்க.

    ஜெசிலா, சீக்கிரமா ஒரு வலைப்பூ ஆரம்பிங்க. இல்ல ஒரு டம்மியாவது இப்போதைக்கு தொடங்கிடுங்க. இல்லாட்டி நானே எனக்கே எழுதிக்கிறேன் – முத்திப் போச்சுன்னு யாராவது நினைச்சிடப் போறாங்க. 🙂

  11. ஷைலஜா July 18, 2007 at 1:39 pm - Reply

    மரணத்தைவிட மரணபயம் கொடியது ஜெஸிலா…எனக்குத் தெரிஞ்சு ஒருகுடும்பத்துல பெரீயவர்க்கு கான்சர் வந்து நல்ல சிகிச்சை எல்லாம் கொடுத்தாங்க…அவரப்போ சொல்லுவார்..’எதுக்கு எனக்கு இதெல்லாம் வயசாச்சு போகவேண்டிய கட்டை’அப்படீன்னு..ஆனா ஒருகட்டத்துல சாவின் விளிம்புக்கு அவர் வந்து டாக்டர்களால் காப்பாத்த முடியாத போது மகன்களிடம் கெஞ்சினார்’நான் செத்துடுவேனாடா என்னை எப்படியாவது பிழைக்கவைங்க”ன்னு…
    பிரபல திரைப்பாடலாசரியர் ஒருவர் தான் உயிரோட இருந்தப்பவே செத்துப்போயிட்டதா சொல்லி எல்லாரையும் கலவரப்படுத்தியதா கேள்விப்பட்டு இருக்கேன்.
    மரணத்துக்குப்பின் நான் யார் எங்கு இரூப்பேன்னு எனக்கு அடிக்கடி கேள்விகள் வரும்..உங்களுக்காவது சுரவேகத்துல இப்ப்டில்லாம் தோணி இருக்கு எனக்கு சும்மா உக்காந்திருந்தாலே தோணும்!!

  12. கண்மணி July 18, 2007 at 1:49 pm - Reply

    ஜெஸி அப்படியே என் மனதை கண்ணாடி போல் காட்டிய பதிவு.இதைப் போல நானும் சாவைப் பற்றியும் அதன் பின் விளைவுகள் பற்றியும் நிறைய முறை மடத்தனமாக [சாரி டு சே திஸ்] உங்களைப் போல கற்பனை செய்து தூக்கம் தொலைத்திருக்கிறேன்.

    சிவாஜி யில ரஜினி சொல்ற மாதிரி
    ‘சாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாயிடும்’.

    நான் கொஞ்ச காலம் வலைப் பதியாமல் இருந்தால் பதிவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்ததுண்டு.ஆனால் இந்த பரந்த பூமியிலும் பதிவுலகிலும் பாசக்கார குடும்பம் தவிர்த்து நெருங்கிய நட்பு வட்டம் இல்லை.அதனால் என் இல்லாமை யாருக்கு தெரியப் போகிறது என நினைப்பேன்.
    அதிலும் அபி அப்பா மட்டுமே என்னைப் பற்றீ அறிந்திருப்பதால் அவர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    ஆனால் இது போல் யோச்சிப்பது மடத்தனம்.நம் நிம்மதியைக் கெடுக்கும்.
    என் தூரத்து உறவுப் பெண்ணொருத்தி வெளியூருக்குத் தனியாக பயணம் செய்த போது பேருந்துலேயே இறந்து விட,அடையாளம் காண ஏதுமில்லாத நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகே போலிஸ் மூலம் அறிந்தனர்.
    வாழ்க்கை நிச்சயமற்றது என்றாலும் நம் பாவ புண்ணியம் நம்மைக் காக்கும் என்று நம்புவோம்.

  13. jaseela July 18, 2007 at 1:49 pm - Reply

    i agree with shylajas view……..summa ukkarnthu irunthaley thonum 🙁

  14. இதே போல ஒரு சிந்தனை எனக்கும் ஒருமுறை வந்திருக்கின்றது… நாம் இறந்து போனால் நம்முடைய வலைப்பதிவு என்னாகும் என்று..?

    ஒன்று கவனிச்சீங்களா இறந்து போனால் கூட வலைப்பதிவைப் பற்றியே கவலைப்பட வைத்திருக்கிறது என்றால் இந்த வலைப்பதிவின் தாக்கம் எந்த அளவிற்கு வந்திருக்கின்றது .

    ம் முகம் தெரியாத எத்தனையோ பேர் இன்னமும் நாம் வலை உலகில் இருக்கின்றோம் என்று நினைத்திருக்க கூடும் நநாம் இறந்து போனது தெரியாமல்…

    சரி அதெல்லாம் கிடக்கட்டும் முதலில் நீங்க வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள்….

  15. ஜெஸிலா July 18, 2007 at 4:53 pm - Reply

    என்ன ஷைலஜா சொல்றீங்க சும்மா உட்கார்ந்திருந்தாலே வருமா? என்னது? மரண பயமா? அடடா. நம்பளவிட படு மோசமான்ன கேஸெல்லாம் இங்க இருக்குதுப் போலப்பா 🙂

    ஏன் கண்மணி இவ்வளவு சீரியஸா யோசித்து தூக்கத்தையெல்லாம் தொலைச்சிருக்கீங்க? நிம்மதியா தூங்குங்க. பாசக்கார குடும்பமா எல்லாம் மோசக்கார குடும்பப்பா 🙂 உங்க ப. குடும்ப உரிப்பினர் ஒருத்தர் சொல்லிருக்காரு பார்த்தீங்களா, குறைஞ்சது ஐந்து நிமிஷம் நினச்சிப்பாங்களாம். அத விட உங்க ப.குடும்பத்தோட மூத்த உரிப்பினர் ஒருத்தர் தனி மடலில் நான் செத்துட்டா ஒரு பதிவு போடுவதா வாக்குறுதி தந்தாரு. பார்த்தீங்களா யாரு சாவா எப்படி அதை பதிவாக்குறதுன்னு அலைறாங்க. நல்லா இருங்கப்பா 🙂

  16. ஜெஸிலா July 18, 2007 at 5:14 pm - Reply

    ஜெசிலா இனி சும்மாலாம் உட்காந்திடாதீங்க நீங்களும் ஷைலஜாவும் ஏதாவது சுமந்துக்கிட்டு உட்காருங்க அப்படியெல்லாம் தோணாது 😉

    நிலவு நண்பா நீங்களுமா? அட எத்தனைப் பேருப்பா கிளம்பிறிக்கீங்க? பெரிய தாக்கம்தான் போங்க. நாங்க ஒழுங்கா ஓட்டினாலும் ஓட்ட விடமாட்டுறாங்களே.

  17. கோபிநாத் July 19, 2007 at 5:40 am - Reply

    அக்கா எல்லோரும் இதை எல்லாம் (மரணபயம்) கடந்து தான் வரவேண்டும்.

    இதுவும் கடந்து போகும்ன்னு நினைச்சிக்கிட்டு அடுத்து ஒரு நல்ல பதிவை போடுங்க 😉

  18. கோபிநாத் July 19, 2007 at 5:41 am - Reply

    \ஆனால் இந்த பரந்த பூமியிலும் பதிவுலகிலும் பாசக்கார குடும்பம் தவிர்த்து நெருங்கிய நட்பு வட்டம் இல்லை.அதனால் என் இல்லாமை யாருக்கு தெரியப் போகிறது என நினைப்பேன்.\

    என்ன ஆச்சு இன்னிக்கு இந்த அக்காஸ்க்கும்….
    அதெல்லாம் ஒன்னும் ஆகாது….எல்லாரும் நல்லா தான் இருப்பிங்க.

    ஜெஸிலாக்கா….உங்களுக்கு ஒன்னும் ஆகாது.

  19. கோபிநாத் July 19, 2007 at 5:41 am - Reply

    \ஏன் கண்மணி இவ்வளவு சீரியஸா யோசித்து தூக்கத்தையெல்லாம் தொலைச்சிருக்கீங்க? நிம்மதியா தூங்குங்க. பாசக்கார குடும்பமா எல்லாம் மோசக்கார குடும்பப்பா 🙂 உங்க ப. குடும்ப உரிப்பினர் ஒருத்தர் சொல்லிருக்காரு பார்த்தீங்களா, குறைஞ்சது ஐந்து நிமிஷம் நினச்சிப்பாங்களாம். அத விட உங்க ப.குடும்பத்தோட மூத்த உரிப்பினர் ஒருத்தர் தனி மடலில் நான் செத்துட்டா ஒரு பதிவு போடுவதா வாக்குறுதி தந்தாரு. பார்த்தீங்களா யாரு சாவா எப்படி அதை பதிவாக்குறதுன்னு அலைறாங்க. நல்லா இருங்கப்பா :-)\

    ;-))))))))))))

  20. இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா வாழ்க்கையில்…

    எனக்கு ஆப்புரேஷன் செஞ்சபிறகு ரெண்டு நாள் கண் விழிக்கவே இல்லை

    ஆனா அந்த ரெண்டு நாள் நான் கண்ட கனவுவை பற்றி யாருகிட்டையும் சொல்லலை..!!!

    அம்புட்டு சாவு விழுந்தது,,:)

  21. அய்யனார் July 19, 2007 at 5:43 am - Reply

    ஒரு கண்ணீர் அஞ்சலி கவிதை நிச்சயம் பதிவேன் ..ஆவியா வந்து கோனார் உரையெல்லாம் கேக்க மாட்டிங்க இல்ல 🙂

    மரணத்த கொண்டாடனும் ஜெஸிலா
    life is the stop between the two notes அப்படிம்பார் ஓஷோ
    இரண்டு இசைக்குறிப்புகளுக்கு மத்தியில ஒரு அமைதி இருக்கும்பாருங்க அதான் வாழ்வு பிறப்பும் இறப்பும் தான் அந்த இரண்டு இசைக் குறிப்புகள்

    இசையின் துவக்கம் நிறுத்தம் முடிவு எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிங்க ..
    வாழ்வு கொண்டாடப்படவேண்டிய அட்டகாசமான விதயம்.

  22. Anonymous July 19, 2007 at 5:44 am - Reply

    என் உயிர் போன பின்னால் என் வலைப்பதிவு உயில் என்று எழுதி வையுங்க.
    போஸ்டுக்கு போஸ்டு.
    உயிருக்கு உயிலு.
    பிளாக்கர் பொண்ணுக்கு
    பாஸ்வேர்ட் பையனுக்கு அப்படின்னு எழுதுங்க

  23. ஜெஸிலா July 19, 2007 at 5:56 am - Reply

    ‘அன்பு மலர்களே நம்பி இருங்களேன் நாளை நமதே’ன்னு ஆளாளுக்கு எனக்கென்னமோ மரண பயம் மாதிரில உபதேசம்!? கோபிநாத் & மின்னுது மின்னல் – எல்லாம் கடந்து போகும், உங்களுக்கு ஒன்றும் ஆகாதுன்னு ஓவரா ‘சிவாஜி’ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துருக்கீங்க – எப்படிப்பா எப்படி இப்படில்லாம் உங்களால மட்டும் முடியுது :-)))

    அய்யனார், எழுதுற அஞ்சலியை பி.ந. லாம் வேண்டாம். அப்புறம் கண்டிப்பா ஆவியா வருவேன் – ஜாக்கிரதை:-)
    நான் சொல்ல வந்த விஷயமே நீங்க சொன்னதுதான், நான் ஒழுங்கா சொல்லவில்லைன்னு பின்னூட்டத்திலிருந்து புரியுது. என்னதான் பா.குடும்பம், அக்கா, தம்பின்னு இருந்தாலும் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வலையுலக உறவுகள் ஒரு 5 நிமிடம் இல்லாட்டி 5 மணி நேரம் அதிகமா போனா 5 நாள் நினைச்சிப்பாங்க அவ்வளவுதான். ஆனால் நாம எல்லோரும் இந்த வலையுலக உறவுக்கூடத்தான் அதிக நேரம் குப்பைக்கொட்டுறோம் என்பதுதான் வருந்தக் கூடிய விஷயம்னு சொல்ல வந்தேன். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  24. ஜெஸிலா July 19, 2007 at 5:58 am - Reply

    யாருப்பா அந்த அனானி? உங்க பெயரைச் சொன்னீங்கன்னா வலைப்பூவை உங்க பெயருக்கே உயிலா எழுதி வச்சிடுறேன். சரியா – டீல்?

  25. Anonymous July 19, 2007 at 8:09 am - Reply

    Jesseela mam

    No body is going to bother if you dont write in blog. When u feel abt death, think about something for your family. BLOG IS NOTHING IN YOUR LIFE.

    Think this way and it is good for you.

    A former BLOGGER

  26. லொடுக்கு July 19, 2007 at 8:09 am - Reply

    உலகே மாயம்…
    வாழ்வே மாயம்…

  27. C.M.HANIFF July 19, 2007 at 9:46 am - Reply

    Naanum ithu pol yositathu undu , kavalai vendam, god is great 🙂

  28. ப்ரசன்னா July 19, 2007 at 9:46 am - Reply

    //ஒருவரின் மரணத்திற்கு பிறகு வலையுலக உறவுகள் ஒரு 5 நிமிடம் இல்லாட்டி 5 மணி நேரம் அதிகமா போனா 5 நாள் நினைச்சிப்பாங்க அவ்வளவுதான். ஆனால் நாம எல்லோரும் இந்த வலையுலக உறவுக்கூடத்தான் அதிக நேரம் குப்பைக்கொட்டுறோம் என்பதுதான் வருந்தக் கூடிய விஷயம்னு சொல்ல வந்தேன். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

    இது எல்லாருக்கும் எல்லா இடத்திலும் பொருந்தும்தானே….

    வலையுலக நண்பர்கள் 5 நாள், அலுவலகம் 1 நாள், மற்ற நண்பர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக நாள் தேவைப்படலாம். குடும்பத்தினருக்கு அதை விட அதிக நாள் வருத்தம் இருக்கும். அவ்வளவுதான். அதுக்காக என்ன செய்யமுடியும். வாழற வரைக்கும் சந்தோஷமா இருக்க வேண்டியதுதான். அதெல்லாம் சரீ…. நீங்க வண்டியை கவனமா ஓட்டுங்க….. வாழ்க வளமுடன்

  29. அழகு July 19, 2007 at 9:46 am - Reply

    அபாயத்தை நொடிப் பொழுதில் புரிந்து கொண்டு சமயோசிதமாக இன்னொரு ரவுண்டு வந்தீங்க பாருங்க … அங்கதான் நீங்க சுத்துறீங்க … ஸாரி, நிக்கிறீங்க!

  30. ஜெஸிலா July 19, 2007 at 9:56 am - Reply

    நீங்களுமா ஹனீஃப் பாய்? 🙂

    நன்றி அனானி. நீங்க சொன்னா மாதிரிதான் நானும் சிந்திக்கிறேன்.

    லொடுக்கு, தேவதாஸ் உங்க நண்பரா? 😉

    நன்றி அழகு.

    ப்ரசன்னா, நீங்க சொன்னா மாதிரி எல்லா இடத்திலும் பொருந்தும் தான் ஆனா முகம் தெரியாமல் பழகி ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். குடும்பத்தைவிட வேலை, அலுவலகம், இணையம் என்று நேரத்தை செலவிடுகிறோமே அந்த ஆதங்கத்தின் வெளிபாடுதான் இந்த பதிவு.

  31. Sumathi. July 19, 2007 at 11:56 am - Reply

    ஹாய் ஜெஸிலா,

    //’நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்’ என்று (ரொம்ப கிறுக்குத்தனமா தெரியல?).//

    நீங்க மட்டும் இல்லீங்க, ஏன் சமயத்துல நான் கூட இப்படி நினைச்சதுண்டு.

  32. Sumathi. July 19, 2007 at 11:59 am - Reply

    ஹாய் ஜெஸிலா,

    //’நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு’ நீங்கள் நினைப்பது புரிகிறது //
    இப்படில்லாம் யாரும் நினைக்க மாட்டாங்க னு தோனுதுங்க…

    (நீங்க எப்பவாவது உங்க சாவைப் பற்றி யோசித்ததுண்டா?).

    நிறய்ய தடவைங்க… நீங்க நம்பனும்னு சொல்லலை..ஆனா நிஜம்..என் சோகங்களை கண்டும், உறவுகளை தெரிந்து கொண்ட பின்பும்..நான் மரணத்தையே வேண்டியிருக்கேன்.

  33. மாலன் July 19, 2007 at 11:59 am - Reply

    அன்புள்ள ஜெசிலா,

    முதலில் கோபம்தான் வந்தது.’என்ன இந்தப் பொண்ணுக்கு இப்படியெல்லாம் யோசனை போகுதுன்னு. சுபா சுந்தரமும், அவர் மகளும் நம் வீடுகளுக்க்கு அருகில் வசித்தவர்கள் என்பதால் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

    ஆனால் இன்னொரு கோணத்தில் நீங்கள் பெரிய கவிஞராகிவிட்டீர்கள் என்றும் தோன்றியது. பெரிய கவிஞர்கள் எல்லாம் மரணத்தைப் பற்றிச் சிந்திருக்கிறார்கள். பாரதியின் காலா, சற்றே அருகில் வாடா, உன்னைக் காலால் மிதிக்கிறேன் எல்லோருக்கும் தெரிந்த வரி. கீட்ஸ் When I have fears I cease to be என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறான்.

    கண்ணதாசன், உயிரோடு இருக்கும் போதே, ஒருநாள், நண்பர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் தான் காலமாகிவிட்டதாக செய்தி பரப்பிவிட்டார். எல்லோரும் அவர் வீட்டுக்கு விழுந்தடித்துக் கொண்டு போனார்கள். ‘இல்லே நான் செத்தா யார் யார் என்ன செய்வாங்கனு பார்க்கலாம்னு செய்தேன்’ என்றார் கூலாக.
    நானும் பெரிய கவிஞர் என்ற நினைப்பில் என் 20 வயதில் ஒரு கவிதை எழுதினேன்:

    விண்கூடி வந்தாலும் வினை கோடி செய்தாலும் வீழ்ந்திட வேண்டுமோர் தினமே/விடிகாலம் வரும்வரையில் விழிமூடிக் கனவில் விளையாடின் துன்பம் படுமே/ மண்மூடிப் போகும் முன் கண்மூடிக் கனவினில் விளையாடு எந்தன் மனமே/மனமூடிக் கிடந்துன்னை மருட்டிடும் கவலைகள் மறைந்தேகும் மாளாத சுகமே/தண்கூடி உடல் தன்னைத் தந்திட்டுப் போயினும் தளராது சொல்லு மனமே/தளராத கனவினில் அயராது துயில்வோரை அணுகாது மரணபயமே
    என்று போகும் அது.

    நீங்கள் எல்லாம் நீண்டகாலம் இருக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுக்கெல்லாம் யார் இரங்கல் பதிவு போடுவார்கள்?

    அன்புடன்
    மாலன்

  34. துளசி கோபால் July 19, 2007 at 12:00 pm - Reply

    பலமுறை இதையெல்லாம் யோசிச்சு ஓரளவு தயார் செஞ்சு வச்சுருக்கேன்.

    ‘போனவுடன்’ எப்படி லாக் இன் செஞ்சு விவரம் பப்ளிஷ் செய்யணுமுன்னு
    ட்ரெயினிங் கொடுத்துருக்கு. அப்பப்ப கோர்ஸ் ரிஃப்ரெஷ் செய்யறதும் உண்டு:-)))))

    ஆனா……….. அட!

    நம்மை மாதிரியே சிந்திக்கும் ஆளைப் பார்த்து சந்தோஷம் வந்ததென்னமோ உண்மை.

  35. ஜெஸிலா July 19, 2007 at 12:19 pm - Reply

    வாங்க சுமதி. நீங்களும் அதே கேஸ்தானா? //நிறய்ய தடவைங்க… நீங்க நம்பனும்னு சொல்லலை..ஆனா நிஜம்..என் சோகங்களை கண்டும், உறவுகளை தெரிந்து கொண்ட பின்பும்..நான் மரணத்தையே வேண்டியிருக்கேன்.// மற்றவர்களுக்காக நாம் மரணத்தை வேண்டுவது தவறு. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்ப்பா 🙂

    துளசி – யு டூ? ஒண்ணு கவனிச்சீங்களா இந்த பதிவுல முக்கால்வாசி பெண்கள்தான் இந்த மாதிரி யோசிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க. மென்மையான மனம் உள்ள பெண்கள்தான் கடுமையானவற்றையெல்லாம் யோசிக்கிறோம் போலிருக்கு 🙂

  36. ஜெஸிலா July 19, 2007 at 12:37 pm - Reply

    மிக்க நன்றி மாலன் ஐயா மிக நீண்ட பின்னூட்டத்திற்கு.

    //சுபா சுந்தரமும், அவர் மகளும் நம் வீடுகளுக்க்கு அருகில் வசித்தவர்கள் என்பதால் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.// உண்மைதான்.

    பெரிய கவிஞர்களோடெல்லாம் இந்த எளியவளை ஒப்பிடாதீர்கள். 😉

    20 வயதில் நீங்கள் எழுதிய கவிதை அருமை.

    //நீங்கள் எல்லாம் நீண்டகாலம் இருக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுக்கெல்லாம் யார் இரங்கல் பதிவு போடுவார்கள்?// ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க? நீங்களும் நீண்ட ஆயுளுடன் நோயற்ற வாழ்வுடன் இருக்க பிராத்திக்கிறேன்.

  37. லொடுக்கு July 19, 2007 at 1:52 pm - Reply

    //கோபிநாத் சொன்னது…
    இதுவும் கடந்து போகும்ன்னு நினைச்சிக்கிட்டு அடுத்து ஒரு நல்ல பதிவை போடுங்க 😉//

    கோபி,
    இதுல எதுவும் உள்குத்து இல்லையே??

  38. அபி அப்பா July 19, 2007 at 2:09 pm - Reply

    //லொடுக்கு, தேவதாஸ் உங்க நண்பரா? ;-)//

    வர வர ரொம்ப உள்குத்து வச்சு பேசரீங்க!:-((

  39. கோபிநாத் July 20, 2007 at 11:02 am - Reply

    \ஜெஸிலா said…
    ‘அன்பு மலர்களே நம்பி இருங்களேன் நாளை நமதே’ன்னு ஆளாளுக்கு எனக்கென்னமோ மரண பயம் மாதிரில உபதேசம்!? கோபிநாத் & மின்னுது மின்னல் – எல்லாம் கடந்து போகும், உங்களுக்கு ஒன்றும் ஆகாதுன்னு ஓவரா ‘சிவாஜி’ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துருக்கீங்க – எப்படிப்பா எப்படி இப்படில்லாம் உங்களால மட்டும் முடியுது :-)))\

    ம்ஹும்…எனக்கு இது தேவை தான்….ரொம்ப நன்றிக்கா (சிவாஜி பட்டத்திற்கு) 😉

  40. ஜெஸிலா July 20, 2007 at 1:00 pm - Reply

    //வர வர ரொம்ப உள்குத்து வச்சு பேசரீங்க!:-((// அபி அப்பா, அதெல்லாம் வச்சு பேசுறதில்ல உங்களைப் போன்றவர்களிடம் பேசும் போது தன்னால் வருது.

    லொடுக்கு கோபித்தான் பதில் சொல்ல வேண்டும் 😉

    கோபி எந்த சிவாஜின்னு தெளிவா புரிஞ்சிக்கோங்க. 😉

  41. delphine July 21, 2007 at 7:26 am - Reply

    i think we ought to be prepared.. atleast people like me who are one sep in the grave…ha ha aha

  42. தியாகு July 21, 2007 at 7:28 am - Reply

    மரணம் நாம் அனுபவிக்காத ஒன்னு
    மேலும் புதிய ஒன்று அதை பற்றி கருத்து சொல்லமுடியாது அது ஒரு அறியாத விசயம் .
    எனவே தான் பயம் , அந்த பயம் எல்லாருக்கும் இருக்கும் – மேலும்
    நீங்க சொல்ற மாதிரி மரணத்தை எதிர்பார்த்து அதற்கு தகுந்த மாதிரி ஏற்பாடுகள் செய்துட்டாலும் மரணமடைய பயப்படத்தான் செய்யும் மனம் .

    தனது இருத்தலை நிரந்தரமாக்க விரும்பும் மனிதன் அதை தொடர பிறவிகள் எனும் கற்பனை செய்கிறான்.

    தனக்கு பிறகு வலைப்பூக்கள் என்னாகும் இது சிரிப்பை வரவழைக்கும் கேள்வி .

    செத்தாலும் வலைப்பூ பற்ரி சிந்திப்பது
    வலைதளத்தில் தான் வாழ்வதாக நினைப்பது இதெல்லாமே அதன் தொடர்ச்சிதான் .

    சரி உலகம் ஒரு நாளில் மொத்தமா அழியுதுன்னு வையுங்க என்ன செய்வீங்க. வலைதளம் என்ன சாதாரண மீன் பிடிக்கும் வலை கூட இருக்காது . 🙂

    அப்படி எல்லாம் நினைத்து வாழ்வை நடத்த கூடாது , சாவு திடீரென வரனும் அதுதான் அதன் அழகு ஒரு மலர் மலர்வது எப்படி அழகானது அதுபோல அதை பிக்ஸ் பன்ன நினைக்காவோ அதை தவிர்க்க நினனப்பதோ பயம் தான் ஜெலீசா

  43. Anonymous July 23, 2007 at 7:36 am - Reply

    உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது… என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது,

    வாழ்க்கை கவிதை வாசிப்போம், வானம் அளவு யோசிப்போம், முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்.

    மனமே… ஓ மனமே நீ மாறி விடு…

    சகோதரன்.

  44. போட்டியில் கலந்துகொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன். http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.html

Leave A Comment