அறம் செய விரும்பு – ‘The Blind Side’
பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’. 2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து [...]
தனியே..தன்னந்தனியே…
’தனிமையிலே இனிமை காண முடியுமா?’ கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அழகிய பாடல். இந்தப் பாடலையே நிறைய பேர் தனிமையில்தான் இரசித்திருக்கக் கூடும். இப்போதெல்லாம் அலுவல் காரணமாக எனக்குத் தனிமையில் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு அமைகிறது. எங்கேயாவது வெளியில் வேலை விஷயமாகச் சென்று விட்டு அவசரகதியில் ஒரு 'சாண்ட்விச்' [...]
கனவான நிஜங்கள்
எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் `இது கனவுதான் கனவுதான்` என்று எனக்குள் நானே சத்தமாகச் சொல்லி இன்றும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் மனதிற்குத் தெரியும் ஆனால் `பீறிட்டு வரும் அழுகையை அடக்குவது எப்படி?` என்று சிறப்புப் [...]
சில நேரங்களில் சில மனிதர்கள்
மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும் திட்டத்தினாலும் நான் திக்கற்று நின்றேன். தனக்குச் சாதகமாக இருக்கும் வரை மனிதன் தான் சார்ந்த மதத்தைப் போற்றுகின்றான். அதனைப் பின்பற்றுவதைத் தம்பட்டமும் அடித்துக் கொள்கிறான். ஆனால் தனக்கு [...]
நினைவுகளில் நீ
நீ இல்லாத வெறுமையைநூலாக்கிகோர்த்துக் கொண்டேன்என்னுள்தைக்க முடிகிறதுநம் நினைவுகளாலானவண்ணம் மிகுந்தகனவுகளை
மறைவின் நிஜங்கள்
ஆசையோடுநீ வாங்கி வந்தபென்ஸ் கார்கொளுத்தும் வெயிலில்காத்திருக்கிறதுநீ வந்தமர்ந்துகுளிர வைப்பாயென.அதனிடம் நான் சொல்லவில்லை நீ விமான விபத்தில் மறைந்து என் எண்ணங்களை வியாபித்திருக்கிறாயெனநீ இல்லாமலிருப்பது தெரிந்தால் சுட்டெரிக்கும் வெப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அது பொசுங்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை