உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ வீசும் பார்வையின் ஒளி
என்னை வந்து கிள்ளுது.
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ விடும் மூச்சு காத்து
உன் ஏக்கம் சொல்லி கொல்லுது
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகி
மேகமழையோடு என்னை தொட்டு செல்லுது
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்
என்னை அணைத்து என்னமோ பண்ணுது
மனதால் உணர்த்தும் காதல் போதும்
வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!
நல்லா இருக்குங்க அனுபவிச்சு எழுதியிருக்கீங்க…
comment moderation enable செய்யவும்
பின்
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html
இங்கே சென்று உங்கள் முகவரியைக் கொடுங்கள்
அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் உங்கள் இடுகைகள் மறு மொழிந்தவுடன் வர ஆரம்பிக்கும்.
ஆகா சூப்பர் 🙂
குமரன் சொன்னபடி மறுமொழி வரும்போதெல்லாம் உங்க பதிவு தமிழ்மணத்தில் வர்ற மாதிரி செய்யுங்க. அதைத் தான் போன வாரம் சொன்னேன், ஆனா எப்படின்னு எனக்குத் தெரியாது 🙂 பிளாக்குக்கும் நமக்கும் கொஞ்சம் தூரம்…
குமரன் & சேது வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள்யோசனைபடியே comment moderation enable செய்து நீங்க கொடுத்த அந்த சுட்டியில் முகவரியை கொடுத்துவிட்டேன். அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் வருமா என்றுதான் தெரியவில்லை.
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
it’s really very nice.i just love it.
நல்லா இருக்குங்க அனுபவிச்சு எழுதியிருக்கீங்க…
இவ்ளோ அழகான கவிதையில் ஒரு சின்ன எழுத்துப் பிழை கண்ணை உறுத்துது. ‘தளையனை’ – தலையனை.