ஆண்கள் இயல்பு கொண்ட
ஆண் வண்டுகள்
மலர் விட்டு மலர் தாவி
மூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்
காட்டு பூக்களின்
தேனை மட்டும் உண்ணாமல்
துளைக்கவும் துடங்கியது
மூங்கிலை.
தூது போன தென்றல்
புல்லாங்குழலென எண்ணி
மூங்கில் துளையில் நுழைந்து
ராகம் எழுப்பியது.
மரங்கொத்தி ராகத்திற்கேற்ப
மரத்தை தட்டி தாளம் துவங்கியது.
குயில் சூழலுக்கேற்ப
பாடி மகிழ்ந்தது
மர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாற
புல்வெளி மேடையாக இருக்க
நேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்
புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆட
வண்ண வண்ண விளக்காக
வானவில் வந்து நிற்க
எழிலகத்தை காண
இரண்டு கண்கள் போதாதே
என் புகைப்பட பெட்டி கூட
இவ்வழகிய காட்சியை அதனுள்
பூட்ட நினைத்ததை எண்ணி
ஏலனமாக புன்னகையித்தது.
Follow
Your opinion in this poetry is wrong…..
muthkrish@sify.com
தவறுன்னு சொன்னா போதுங்களா? என்ன தவறுன்னு சுட்டிக்காட்டினா தானே திருத்திக்குவோம்.