அறிவின் ஆரம்ப எழுத்து – அலிஃப்
நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் [...]
கற்கால மனிதர்கள்
இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல. உண்மை சம்பவம், மிகவும் வலி [...]
மெஹர்
இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'. எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் [...]
‘நம் நாயகம்’
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த அறுபத்தி மூன்று சம்பவங்கள் பற்றி நான் எழுதிய நூல். வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம் 9, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை 600 004 தொலைபேசி: 044 2499 7373/ 94440 25000 For online ordering: http://rahmath.net/children/817-nam-naaygam.html
நான் ஒரு இனப் பாகுபாடாளர் அல்ல…
அலுவலக வாசலில் உள்நுழையுமிடத்தில் ஏதோ கொட்டிக்கிடந்தது, அது வெள்ளை பளிங்குத் தரையில் பளிச்சென்று தெரிந்தது. நான் வரவேற்பாளினியிடம் "என்னது இது?" என்றேன். அவள் அலட்சியமாக "யாரோ கொஞ்சம் காபிக் கொட்டிட்டாங்க" என்றாள். "துடைத்துவிடலாம், இல்லாவிட்டால் அதை மிதித்து மற்ற இடமும் அழுக்காகிவிடும்" என்றேன். அவள் வேலையைப் பார்த்தப்படியே "இன்னும் ஒரு மணி நேரத்தில் பணியாளர் வந்துவிடுவார், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்" என்றாள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை கடந்த எங்கள் பொது மேலாளர் ஒரு [...]