தாய்மைக்குப் பின் திருமணம்

உலகத்தில் இந்தப் பகுதியில் வாழ்வதால் நிறையவே கலாச்சார அதிர்வுகளைச் சந்தித்துள்ளேன். நேற்றும் இப்படித்தான், என் பிலிப்பினோ தோழி ஷேன் தாயாகவிருப்பதைச் சொன்னாள். என்னையும் மீறிய கலவரம் முகத்தில் தொற்றிக் கொண்டதை அவள் கவனித்திருக்கக்கூடும் அதனால் அவளாகவே "ஷேனுக்கு அடுத்த வாரம் திருமணம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களெல்லாம் சரியாகிவிட்டது, அதனால் பிரச்சனையில்லை" என்றாள். அவளே மறுபடியும் "ஷர்மாவின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்தாயா? மணப்பெண் அழகாக இருந்தாளல்லவா?" என்று தொடர்ந்தாள்.எங்களுடன் வேலை பார்த்த ஷர்மாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பு [...]

ரெக்கை கட்டிப் பறக்குது பாயம்மா பொண்ணோட சைக்கிள்

யுவகிருஷ்ணா ஆல்தோட்டத்தை நினைவுப்படுத்தினாலும் படுத்தினார் மலரும் நினைவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலிருந்து ஒரு சம்பவத்தையாவது பதிவிட நினைத்ததே இது. பீட்டர்ஸ் காலனி குடியிருப்புப் பகுதியில் வளர்ந்த எனக்கு ஆல்தோட்டம் மிகவும் பழக்கப்பட்ட இடம். வண்ண மீன்கள் வாங்குவதற்கும் வாடகை சைக்கிள் எடுப்பதற்கும் அடிக்கடி சென்று வரும் இடம். அப்போதெல்லாம் வாடகை சைக்கிள் ஒருமணி நேரம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய். இப்போது 'வாடகைக்கு சைக்கிள்' உண்டா என்று தெரியவில்லை. அந்த இரண்டு ரூபாய் சேர்க்க நான்கு முறையாவது [...]

இந்நாளில் உன் நினைவு…

சின்ன வயதிலிருந்தே எனக்கு நட்பு வட்டம் அதிகம். எல்லோரும் நெருங்கி வந்தாலும் ஒரு அடி தள்ளி இருப்பதே என் வழக்கம்.நான் ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எனக்கு முனீரான்னு ஒரு தோழி. என் மீது ரொம்ப பாசமா, அன்பா என்னை அவள் குழந்தை போல பாவிப்பா. ஆனா அதே அன்பும் அக்கறையும் எனக்கு அவளிடமில்லை. நான் சொல்றதெல்லாம் அவ செய்வாள்..ஆனாலும் அந்த நட்போட ஆழம் அப்போ புரியலை. அவளுக்கு என்ன பொருள் கிடைச்சாலும் அது எனக்குக் கொடுத்திடுவா. நானும் [...]

மனம்தான் வயது | How old are you?

'இந்தப் படம் வந்தா நாம இருவரும் கண்டிப்பாக போகணும்' என்று என் தோழி கட்டளையிட, இந்தப் படம் வருவதற்காக காத்திருந்தோம். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் 'மஞ்சுவாரியார்'. அதற்காக அடித்துப் பிடித்து முதல் நாளோ அல்லது முதல் வாரமோ செல்லவில்லை. எல்லோரும் பார்த்து முடித்த திரையரங்கில் காலியான இருக்கைகளுடன் நாங்கள் இருவர் மட்டுமே பார்த்து ரசித்த படம். பின்ன அலுவலக நேரத்தில் 'கட்' அடித்துவிட்டு போக சாக்குப்போக்கு சொல்லணும்ல? 'How old are you?' கண்டிப்பா [...]

By | 2017-01-08T12:49:47+00:00 June 28th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

ஆனந்த யாழை மீட்டிய சாதனா

சாதனை படைத்த சாதனாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். 'தங்க மீன்கள்' திரைப்படத்திற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற குழந்தை சாதனாவின் வசிப்பிடம் துபாய். இந்தத் திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பே அதன் முன்னோட்டத்தை 'அமீரகத் தமிழ் மன்றத்தின்' ஆண்டு விழாவில் அரங்கேற்றியிருந்தோம். 'தங்க மீன்களை'த் திரையில் காண ஆவலாக இருந்த துபாய் மக்களுக்குப் பெரிய ஏமாற்றம். காரணம் இப்படம் துபாய் திரையரங்கிற்கு வரவேயில்லை. தேசிய விருது அதுவும் மூன்று விருதுகள் என்றதும் அவளுடைய பெற்றோரைப் [...]

By | 2017-01-08T12:58:37+00:00 May 13th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

பிள்ளை மனம்

'அபுதாபியில் கில்லர் கரோக்கே' என்ற விளம்பரத்தைப் பார்த்து, "இதில் நான் பங்கேற்க போகிறேன்" என்று சொன்ன உடன் என் மகள் ஃபாத்தின் "ம்மா பாம்பு உங்க உடம்ப சுத்தும், பச்சோந்தி உங்க தலையில ஏறும், தவளை மேலே குதிக்கும்" என்றெல்லாம் அடுக்க அடுக்க நான் "பரவாயில்ல பரவாயில்ல கடிக்காதுல" என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். உடனே என் மகன் ஃபாதில் "அப்போ எங்கள 'ஸ்கூலுக்கு' யாரு கிளப்புவாங்க" என்றான், "அதுக்கென்னப் பார்த்துக்கலாம்" என்றேன். "எங்களுக்கு யார் சமச்சித் [...]

Queen: மனதை ஆளும் “ராணி”

வேற்று மொழியில் நல்ல படங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'ம்ஹும் தமிழுக்கு இது சரிப்படாது' என்றே தோன்றுகிறது. ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் அடைபடுவது போல் தான் நமது படங்களையும் காட்சிப்படுத்த வேண்டிய அவசியமென்ற ஒரு பொய் முகத்தை அணிந்து கொள்கின்றனர் அல்லது மக்களுக்கு இப்படியானதுதான் பிடிக்குமென்று நினைத்துக் கொள்கின்றனரா? குறிப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் போது அதுவும் அவள் கதாநாயகியென்றால் 'ஒழுக்கம்' என்ற வளையத்திற்குள் அவளை அடைத்து விடுகின்றனர். அதில் மிகுந்த சோகம் என்னவென்றால் [...]

By | 2016-12-20T18:18:21+00:00 March 27th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

தவிக்க வைத்த ‘நூறு நாற்காலிகள்’

'அறம்' என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழலும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையைப் படித்து முடிப்பதற்குள் பலநூறு பரிமாணங்களை நானே எடுத்துவிட்டிருக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவுக்குச் சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் பிரயாணித்தது. எல்லாச் சிந்தனைகளை அலசிப் பார்த்ததிலிருந்தும் என்னுடைய வாழ்வியல் அனுபவங்களின் நினைவுகளிலிருந்து தேடிப் பார்த்ததிலிருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், நான் இப்படியான மனிதர்களைச் சந்தித்ததேயில்லையென்று. யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள், மிகவும் ஆடம்பரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கிறேன், [...]

By | 2016-12-20T18:18:21+00:00 February 26th, 2014|விமர்சனம்|0 Comments

விடைகாகக் காத்திருக்கும் கேள்விகள் | 101 சோதியங்கள்

அறிவியல், விஞ்ஞான, தொழிற்நுட்பமென்று எல்லாம் வளர்ந்திருந்தாலும் விடையில்லாத கேள்விகள் நம்முன் நிறைந்தே நிற்கின்றன. அப்படியான கேள்விகளில் ஒன்றுதான் '101 சோதியங்களின்' 101-வது கேள்வி. ஒருவரி கதையை மிக நுட்பமான கவிதையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்த சிவா. குழப்பங்களோ, திருப்பங்களோ, அதிர்வுகளோ இல்லாத மிக சாதாரணப்படம் கதை சொல்லலில் சிறந்து நிற்கிறது. தனித்தன்மை என்ற பாசாங்கேதுமில்லாமல் தனது வலுவான கதாபாத்திரத்தை வைத்து படத்தைத் திறமையாக ஈர்ப்புடன் நகர்த்தியுள்ளார்.குழந்தையை கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம். குழந்தைகள் நமக்குத் தெரியாத விஷயத்தை [...]

By | 2016-12-20T18:18:22+00:00 February 17th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

யானை டாக்டர்

நீங்கள் யானையை எப்போதாவது பார்த்ததுண்டா? பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? நான் சமீபத்தில் பார்த்ததில்லை, சென்ற ஆகஸ்ட் தாய்லாந்திற்கு செல்லும் போது சாகசம் செய்துகொண்டிருந்த யானைகளைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்ட யானையின் கண்களைப் பார்த்தால் மிக எளிமையாக என்னிடம் சம்பாஷனை செய்வதாக 'நான் ரொம்ப நல்லவன்' என்று சொல்வதாகத் தோன்றியது. பாசத்தில் செல்லமாக ஒரு அடி அடித்து வைத்தால் என்ன செய்வது என்று பயந்து, அருகே செல்லவில்லையே தவிர யானை மீது அன்பு [...]

By | 2016-12-20T18:18:22+00:00 February 6th, 2014|விமர்சனம்|0 Comments