பெட்டிக்குள் அடங்காதது

ஆண்கள் இயல்பு கொண்டஆண் வண்டுகள்மலர் விட்டு மலர் தாவிமூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்காட்டு பூக்களின்தேனை மட்டும் உண்ணாமல்துளைக்கவும் துடங்கியதுமூங்கிலை.தூது போன தென்றல்புல்லாங்குழலென எண்ணிமூங்கில் துளையில் நுழைந்துராகம் எழுப்பியது.மரங்கொத்தி ராகத்திற்கேற்பமரத்தை தட்டி தாளம் துவங்கியது.குயில் சூழலுக்கேற்பபாடி மகிழ்ந்ததுமர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாறபுல்வெளி மேடையாக இருக்கநேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆடவண்ண வண்ண விளக்காகவானவில் வந்து நிற்கஎழிலகத்தை காணஇரண்டு கண்கள் போதாதேஎன் புகைப்பட பெட்டி கூடஇவ்வழகிய காட்சியை அதனுள்பூட்ட நினைத்ததை எண்ணிஏலனமாக புன்னகையித்தது.

By | 2006-05-21T10:55:00+00:00 May 21st, 2006|கவிதை|2 Comments

புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்எனக்கோ குளிரின் நடுக்கம்.உன் மேல் ஏந்தான்வேர்வையோ?பாவம் நீ என்று நான் விசுறவேர்வைகள் உன்னுடன்உறவாடி ஒட்டிக்கொள்ளவிரல்களால் உன் வேர்வைதுடைக்க அச்சம்உன் துயில் கலைந்து விட்டால்?உற்று நோக்கி கொண்டிருக்கையில்சூரியன் எழுந்தான்உன் வேர்வைகளும் மறைந்தனவேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன

By | 2006-05-13T11:13:00+00:00 May 13th, 2006|கவிதை|0 Comments