குமுறல்
பிறந்த உனைதிறந்த மேனியாய் விடாசிறந்த துணியால் பொதித்தோம்வளரும் பருவத்தில்எமக்கு பிடித்ததெல்லாம்உடுத்தி பார்த்தோம்நிமிர்ந்த நடையும்நேர் கொண்ட பார்வையும்அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்வளர்ந்த பின்னேமறைக்க வேண்டியதை மூடவில்லைஅறிவுரைகளை கேட்கவில்லைபாராட்டும் பத்திரமும்புகழும் பெயரும்பொருளோடு சேர்த்துக் கொண்டாய்அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்எனக்கு பெருமையும் இல்லைஉன் மீது வெறுப்பும் இல்லைஉன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லைமன குமுறல்கள் பல இருந்தாலும்உன் மகிழ்ச்சிக்காகஎன் வாய் வளைந்தது புன்னகையாக