About Jazeela Banu

This author has not yet filled in any details.
So far Jazeela Banu has created 164 blog entries.

பொய்மையில்லா வாய்மை – About Elly | Darbareye Elly

'அபவ்ட் எல்லி' விமர்சனம் மூலமாக மற்றவர்களை பார்க்கத் தூண்ட வைக்கும் எண்ணத்தில் எழுதியதல்ல. திரைப்பட விமர்சனங்களை முன் வைக்கும் போது எழுதுபவர்கள் தான் இரசித்ததை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள அல்லது தனக்கு புரிந்ததைச் சொல்லி மற்றவர்களை பார்க்கச் செய்து சரி பார்த்துக் கொள்ளவென்று எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் என்னுடைய காரணங்களாவது மறக்க முடியாத காட்சிகளை பத்திரப்படுத்துவதற்கான தளம். வாழ்க்கையில் யாரையாவது தொலைத்துவிட்டு தேடியது உண்டா? என் நெருங்கிய தோழி தன் பெற்றோரை பத்து வருடத்திற்கு [...]

By | 2016-12-20T18:18:22+00:00 January 6th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

கடந்து போன காலம்.. The Past – Le Passé

ஆரம்பக் காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் படம் 'தி பாஸ்ட்' (The Past - Le Passé). தலைப்பை 'தி பாஸ்ட்' என்று வைத்துவிட்டு ஒரு 'பிளாஷ் பேக்' கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதை சொல்லி மூலமோ குட்டிக் கதை மூலமோ சொல்ல முற்படாமல் கதையில் வரும் காட்சிகளின் நகர்வை வைத்தும், வசனங்களை வைத்தும் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறார் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி. [...]

By | 2016-12-20T18:18:22+00:00 December 11th, 2013|திரைவிமர்சனம்|1 Comment

அறிந்தும் அறியாமலும்…

மற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது பேசிவிட்டு அது தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டால் எனக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. ஆரம்பத்தில் மேலாளர் என்னுடன் இதற்காகவே மிகவும் சினம் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர் [...]

By | 2013-10-01T10:15:00+00:00 October 1st, 2013|சிறுகதை|5 Comments

எங்கே அவள்?

'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். தனது மூன்று வயது மகள் ரோஷிமாவுக்கென்றால் கேட்கவே வேண்டாம் கேட்காமல் சகலமும் தந்திடுவாள் அவளுடைய நேரத்தைத் தவிர. கணவன் - மனைவி இருவரும் வியாபாரம், வெளியூர் பயணமென்று [...]

By | 2013-04-01T11:37:00+00:00 April 1st, 2013|சிறுகதை|3 Comments

எங்கிருந்தோ வந்தான் – The Man from Nowhere

நாளை என்பதை மறந்து இந்த நிமிடத்திற்காக மட்டும் வாழ்பவராக நாமிருந்தால் நம்மைப் பற்றி யோசிப்போமா அல்லது சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்திற்காகப் பாடுபடுவோமா? நம் சகோதரர்கள் உலகில் பல இடங்களில் இன்னல்களில் இருந்தாலும் அவர்களுக்காக நம் பங்கு என்னவாக இருந்துவிட முடியும்? பிற நாடு வேண்டாம் அண்டை மாநிலம்,, அதுவும் வேண்டாம் சொந்த ஊர் இல்லை, அடுத்த தெரு ம்ஹும் பக்கத்து வீட்டில் பிரச்சனை அல்லது வன்கொடுமை என்றாலும் கூட தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் நம்மிடையே ஏராளம். [...]

By | 2012-12-04T08:32:00+00:00 December 4th, 2012|திரைவிமர்சனம்|5 Comments

உறவும் பிரிவும் – A Separation

உறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் இப்படி? விவாகரத்தின் காரணங்கள், ஒருவரால் ஒருவருடன் வாழவே முடியாது, சகித்துக் கொள்ளவே முடியாது என்ற பட்சத்தில் விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லது வேறு ஒருவருடன் வாழ துடிப்பதாலும் விவாகரத்து [...]

By | 2012-11-27T06:14:00+00:00 November 27th, 2012|திரைவிமர்சனம்|2 Comments

அறம் செய விரும்பு – ‘The Blind Side’

பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’. 2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த [...]

By | 2012-11-21T11:09:00+00:00 November 21st, 2012|திரைவிமர்சனம்|4 Comments

தனியே..தன்னந்தனியே…

’தனிமையிலே இனிமை காண முடியுமா?’ கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அழகிய பாடல். இந்தப் பாடலையே நிறைய பேர் தனிமையில்தான் இரசித்திருக்கக் கூடும். இப்போதெல்லாம் அலுவல் காரணமாக எனக்குத் தனிமையில் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு அமைகிறது. எங்கேயாவது வெளியில் வேலை விஷயமாகச் சென்று விட்டு அவசரகதியில் ஒரு 'சாண்ட்விச்' எல்லாமில்லை. என்னதான் அவசரகதியில் இருந்தாலும் சாப்பிடும் நேரத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். துபாய் மரினா மால் 'ஃபுட்கோர்ட்டில்' அமர்ந்திருந்து என்னைச் சுற்றியிருக்கும் [...]

கனவான நிஜங்கள்

எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் `இது கனவுதான் கனவுதான்` என்று எனக்குள் நானே சத்தமாகச் சொல்லி இன்றும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் மனதிற்குத் தெரியும் ஆனால் `பீறிட்டு வரும் அழுகையை அடக்குவது எப்படி?` என்று சிறப்புப் பயிற்சி பெறாதவளாக, அது பற்றி யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிலர் ஆறுதல் சொல்ல வந்தால் எப்படி [...]

சில நேரங்களில் சில மனிதர்கள்

மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும் திட்டத்தினாலும் நான் திக்கற்று நின்றேன். தனக்குச் சாதகமாக இருக்கும் வரை மனிதன் தான் சார்ந்த மதத்தைப் போற்றுகின்றான். அதனைப் பின்பற்றுவதைத் தம்பட்டமும் அடித்துக் கொள்கிறான். ஆனால் தனக்கு ஒத்துவராது என்று வந்துவிட்டால் 'முடிந்த வரை நான் கடைப்பிடிக்கிறேன் மற்றவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான்' என்று இறைவன் மீதே பழிபோட்டு விஷயத்தையே மூடிவிடுகின்றான். என்னுடன் வேலை பார்த்த [...]

By | 2011-08-17T06:21:00+00:00 August 17th, 2011|சிறுகதை|6 Comments