அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை), மரக்கலத்தில் ஓர் ஓட்டை போட்டதை கண்டு பதறிய மூஸா (அலை) அவர்களிடம், தாமாக விளக்கம் தரும் வரை அது பற்றிக் கேட்கக் கூடாது என்பதை கித்ரு (அலை) நினைவுப்படுத்தியதும். மேலும் கேள்விகள் கேட்கக் கூடாது என்று உறுதியெடுத்து, பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அதற்கு கித்ரு (அலை) “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள் விளக்கம் தராமலே. அதை உணர்ந்தவர்களாக மூஸா (அலை) “இதன் பிறகு நான் உங்களிடம் எதைப் பற்றியாவது கேள்வி கேட்டால், என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம், என்னை உங்கள் தோழனாகவும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று மறுபடியும் உறுதியளித்தார்கள்.
அதனையேற்றுக் கொண்டு மறுபடியும் இருவரும் பயணத்தைத் தொடர்ந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அவர்களிடம் சாப்பிட ஏதுமில்லை. பணமும் இல்லை. இருவரும் பசி மிகுதியில் கிராமத்து மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால் அம்மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்.
மறுபடியும் நடக்க ஆரம்பிக்கும் போது அங்கே உடைந்து விழும் நிலையில் ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர். உடனே கித்ரு (அலை) அச்சுவரைப் பூசி சரி செய்தார்கள். இடிந்துவிழ வேண்டிய சுவர் உறுதியாக நின்றதைக் கண்ட மூஸா (அலை) “நம்மிடம் பணமில்லை, பசியால் வாடுகிறோம். நீங்கள் இந்தச் சுவரை சரி செய்ததற்காவது இவர்களிடம் கூலியைப் பெற்றிருக்கலாமே?” என்று கேட்டார்கள்.
புன்னகையுடன் கித்ரு (அலை) மூஸா (அலை) அவர்களிடம் “நாம் இருவரும் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டீர்கள் என்ற உறுதியின்பேரில் நம் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் என் செயலிற்கான காரணங்கள் புரியாமல் ஆர்வ மிகுதியில் பொறுமை இழந்தவராக நீங்கள் கேள்விகளைக் கேட்டுவிட்டீர்கள். இனி தாமதிக்காமல் என் செயலுக்கான காரணத்தை உங்களுக்கு விளக்குகிறேன்” என்றார்கள்.
அக்காரணங்கள் என்னவாக இருக்குமென்று மிகுந்த ஆவலுடன் மூஸா (அலை) இருந்தார்கள்.
திருக்குர்ஆன் 18:74-78
Leave A Comment