தமிழ் எழுத்தை
கற்றுத் தந்த நீங்கள்
இன்று எங்கு இருக்கிறீர்கள்?
தினமும் ஒரு திருக்குறளென
இரு வரியை மனனம் செய்து
உரையை விவரித்த நீங்கள்
இன்று எங்கே இருக்கிறீர்கள்?
விதையை விதைத்துவிட்டு
விருட்சத்தின் வளர்ச்சியை
காணாமல்
எங்கு சென்றுவிட்டீர்கள்?
எங்களின்
முதல் சொல்
முதல் வாக்கியம்
முதல் சிந்தனை
முதல் கற்பனை
முதல் உளறல்
முதல் கவிதை
முதல் சந்தேகம்
என்று எல்லாமே
முதலில் பிறந்தது உங்களிடம்தானே?
முயற்சி, தன்னம்பிக்கை
போராட்டம், கடமை,
ஒழுக்கம், திறமை
என்று இல்லாதவற்றையும்
தோண்டி ஊற்றை
எங்களுக்குள் எடுத்த நீங்கள்
எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக
இருந்த நீங்கள்
இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?
உங்களுக்காக எழுதுகிறேன்
என்றதும் சின்னபிள்ளையாகவே
மாறிவிட்டேன்.
இந்த எளியவளை
ஏணியாக நின்று உயர்த்திவிட்டு
நீங்கள் மட்டும் அதே இடத்தில்
இருப்பதுதான்
ஆசிரிய தர்மமா?
எங்கிருந்தாலும் என்
ஆசிரியர் தின வாழ்த்தை
பெற்றுக் கொள்ளுங்கள்
your kavithai is super.
வாழ்த்துக்கள் ஜெஸிலா… விகடன் வரவேற்பறை பகுதியில் தங்களது வலைப்பூ குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது. தங்களது வலைப்பூ குறித்த அறிமுகத்தை ஆசிரியர் குழுவிற்கு அறிமுகப்படுத்தியவன் என்ற முறையில் மகிழ்கிறேன்… வாழ்த்துகிறேன்….
நன்றி செல்வேந்திரன் என்னையும் ஆசிரியர் குழுவிற்கு அறிமுகப்படுத்தியதற்கு :-).
தொண்டீஸ்வரன், வலையுலகிற்கு நீங்கள் புது வரவாக தெரிகிறதே? உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
nalla kavithai , vaashthukkal 🙂
enakku mudhal mudhalil ellavatraiyum solli koduthathu en annai thaan. avargal thaan enakku 3 varudangalukku aasiriyai. aathalal en vazhthukalai late-a sonnalum latest-aaga theriyapaduthukiraen
ஆசிரியர் தினத்தன்று அ ஆ சொல்லிக் கொடுத்த ஆசிரியர் தொடங்கி, பட்டப் படிப்பு வரை துணை நின்ற பல்வேறு ஆசிரியப் பெருமக்களுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் புனையப்பட்ட இதயத்திலிருந்து எழுதப்பட்ட கவிதையின் சிறப்பு பற்றி எழுதுவதற்கு நான் கவிஞனில்லை. அதனால் இதய பூர்வமாக வாழ்த்துகிறேன். மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
ஆசிரியப்பணியே அறப்பணி !!!!
அதற்கே உனை அர்ப்பணி !!!
இது ஆசிரியர்களின் தாரக மந்திரம்.
ungal vimarsanangal athanaiyum miga nandraaga ulladhu.ungal pani menmelum sirakka vaalthuhiren.vikatanukku nandrihal.