வழிபாட்டிற்குரியவன் ஒருவனே

இஸ்லாமியர்களின் முதல் கலிமாவான `லா இலாஹ இல் லல்லாஹ்` என்பதின் பொருளை கூர்ந்து கவனித்தால் `வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை` என்பதாகும்.

`லா இலாஹ` அதாவது வழிபாட்டிற்குரியவன் யாருமில்லை என்று கூறும் போதே வழிபாட்டிற்குரிய தகுதி யாருக்கும் எவருக்கும் இல்லை என்று முதலில் மறுத்துச் சொல்லிவிட்டு, பின்பு `இல் லல்லாஹ்` – அல்லாஹ்வைத் தவிர என்று அதனை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறான். இதிலிருந்து தகுதி அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது, அவனுக்கு இணையாக யாரும் எதுவும் இல்லை என உறுதிப்படுத்துவதே இஸ்லாமின் அஸ்திவாரமாகும்.

இந்தக் கலிமாவை மனதார மொழிந்தவர்களுக்கு நரகம் தடுக்கப்பட்டதாகிவிடுகிறது.

“யார் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் `லா இலாஹ இல் லல்லாஹ்` என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்“ என்று ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

இதுவே இறைத்தூதர்களின் இஸ்லாமிய அழைப்பிற்கான திறவுகோலாக இருந்தது.

வெறும் வாய் வார்த்தையாக மொழிவதல்லாமல் பொருள் உணர்ந்து, உறுதியாகத் தெளிந்த உள்ளத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இதைக் கூற வேண்டும்.

https://goo.gl/9dy1u0

By | 2017-03-25T14:22:31+00:00 April 5th, 2016|0 Comments

Leave A Comment