கனவான நிஜங்கள்

எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் `இது கனவுதான் கனவுதான்` என்று எனக்குள் நானே சத்தமாகச் சொல்லி இன்றும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் மனதிற்குத் தெரியும் ஆனால் `பீறிட்டு வரும் அழுகையை அடக்குவது எப்படி?` என்று சிறப்புப் பயிற்சி பெறாதவளாக, அது பற்றி யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிலர் ஆறுதல் சொல்ல வந்தால் எப்படி [...]